மும்பை, March 8, 2016 /PRNewswire/ --
இந்தியாவில் கணினி கல்வியை அதிகரிக்க வேண்டும் என்கிற ஒட்டுமொத்த நோக்கத்தோடு நிறுவனத்தின் CSR முயற்சியின் ஒரு பகுதி.
'CRY-குழந்தைகள் உரிமையும் நீங்களும்' அமைப்போடு இணைந்தும் கார்ப்பரேட் சமூக முயற்சியின் ஒரு பகுதியாகவும், இன்று இந்தியாவில் ஏழை குழந்தைகள் மற்றும் அவர்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக பணிசெய்யும் CRY என்னும் ஒரு முன்னணி அரசாங்கம் சாராத நிறுவனத்திற்கு (NGO) ASUS 8 மடிக்கணினிகளை தானம்செய்தது. இந்த மடிக்கணினிகள் நாட்டில் கணினி கல்வியை அதிகரிக்க வேண்டும் என்கிற ஒட்டுமொத்த நோக்கத்திற்காக CRY மூலம் பயன்படுத்தப்படும். பயன்பாட்டை அதிகரிக்கவும் பல குழந்தைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், மடிக்கணினிகள் பிற சமூக இடங்களைக் காட்டிலும் 24 மணிநேர பாதுகாப்பு உடைய CRY அலுவலகத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160307/10141629)
இத முயற்சி குறித்து கருத்துதெரிவித்த Mr. Peter Chang, பிராந்திய தலைவர் - தென்னிந்தியா & இந்திய தேசிய மேலாளர் இவ்வாறு கூறினார், "இந்தியாவில் கணினி கல்வியை அதிகரிக்க வேண்டும் என்கிற பொதுவான இலக்கை நாங்கள் பகிர்ந்துகொண்டு இருக்கும் CRY போன்ற அமைப்புடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மடிக்கணினிகள் குழந்தைகளுக்கு கற்றலை அதிக ஆர்வமூட்டுவதாக மாற்றி அவர்களுடைய ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கு உதவும்."
குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் தொடர்ச்சியாக பள்ளிகளில் கலந்துரையாடுவதன் மூலம் பள்ளிகள் குழந்தைகள் உரிமைகளை குறித்த அதிக விழிப்புணர்வு பெறச்செய்வதிலும் அதிகமாக குழந்தைகள் நட்பாக மாறும்படி செய்வதிலும் CRY கவனம்செலுத்துகிறது. இந்த அமர்வுகள் இந்த மடிக்கணினிகள் மூலமாக திரையிடப்படும் ஒலி-ஒளி ஊடகம் /அறிவுபுகட்டும் திரைப்படங்கள் மூலமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக மாற்றப்படும்.
இந்த முயற்சியை வரவேற்று, Mr. Atindra Nath Das, பிராந்திய இயக்குநர் (கிழக்கு), CRY, குழந்தைகள் உரிமையும் நீங்களும், இவ்வாறு கூறினார், "குழந்தைகளின் கல்வி என்னும் தொண்டை முயற்சிக்க ASUS நிறுவனத்தை உந்திய புன்னகையைப் பரப்பச்செய்யும் உணர்வை நாங்கள் உண்மையாகவே அங்கீகரிக்கிறோம். CRYஇல், எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கற்றலை அதிக ஆர்வமுள்ளதாகவும் ஊடாடல்மிக்கதாகவும் மாற்ற முயற்சிக்கிறோம், மற்றும் CRYக்கு ASUS கொடுத்த இந்த மடிக்கணினிகள் கற்றலை மகிழ்ச்சியானதாக மாற்றுவதில் நீண்ட நெடுந்தூரம் உதவிசெய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். அது மட்டும் அல்லாது கணினி குறித்த கல்வியில் மாணவர்களும் ஆசிரியர்களும் நன்கு பரீட்சையமான பிறகு பள்ளிகளில் பல்வேறு ஊடாடல்கள் அதிக தாக்கமுள்ளதாக மாறும். இது குழந்தைகள் கணினி அறிவு அத்தியாவசியமாக தேவைப்படும் இடத்திலே மிகவும் பயனுள்ள திறன்களை கற்க குழந்தைகளை வழிநடத்தும்."
ASUS பற்றி
ASUS, ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் சிறந்து விற்பனையாகின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ASUS, மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பீசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணிந்துகொள்ளக்கூடியவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. தனது புதுமையினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ASUS, 2013-ல் 4,256 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பீசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ASUS, உலகம் முழுவதும் 12,500 -க்கும் அதிகமான பணியாளர்களுடன், 3,800பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2013-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் யூஎஸ் டாலர் 14 பில்லியன் ஆகும். ASUS சமீபத்தில் Fortune உலகின் மிக பிரம்மிக்கப்பட்ட நிறுவனங்கள் 2015 உலகளவில் கணினி தொழில்நுட்ப பிரிவில் 6ஆம் இடத்தைப் பிடித்தது. சில விரைவாக விரிவடையும் நிறுவனங்கள் இந்த 'புதுமை' மற்றும் 'மக்கள் மேலாண்மை' ஆகியவற்றை 5ஆம் இடம் அளவிற்கு உயர்வாக மதிப்பிடுகின்றன.
மேலும் தகவல்களுக்கு, வருகைதாருங்கள்: http://www.asus.com/in/ .
ஊடக தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
+91-9818520082
ASUS India Pvt Ltd
Share this article