மும்பை, December 1, 2017 /PRNewswire/ --
இந்திய ஃபார்மா வாரம் என்ற தலைப்பில் UBM இந்தியாவின் ஒரு பிரத்யேக உச்சிமாநாடு
கடந்த ஆண்டு CPhI & P-MECஇன் பத்து வருட நிறைவு விழாவைக் கொண்டாட UBM இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது 2 வது பதிப்பு காணும் இந்திய ஃபார்மா வாரத்தில், UBM இன் தலைமை பங்கேற்பு தளம் மற்றும் உலகின் முன்னணி மருந்து நெட்வொர்க்கிங் நிகழ்வில், அதன் மிக உற்சாகமான மற்றும் உணர்வூட்டும் முன்முயற்சியில் ஒன்றாக, 'மருந்து துறையில் மகளிர்: ஆசைப்படு, வழிநடத்து, எழுச்சியூட்டு' நிகழ்ச்சி அமைந்தது.
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/608529/CPhI_India_and_P_MEC_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/608528/India_Pharma_Week_Logo.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/613262/Women_in_Pharma.jpg )
இந்நிகழ்வில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டாடுவதற்காக, மருந்து மற்றும் உயிர்-மருந்தக உற்பத்தியாளர்களின் மூத்த மேலாண்மை மட்டத்தில் மிகவும் விரும்பப்பட்ட சில பெண்கள், தொழில் முனைவோர் மற்றும் வழிகாட்டிகள் ஆகியோர் தங்கள் அறிவுத்திறன், அனுபவம் ஆகியவற்றை இச்சபையில் பகிர்ந்துகொண்டதைக் காணமுடிந்தது. கடந்த வருடம் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக 'மகளிர் ஃபார்மா'வின் 2 வது பதிப்பு மிகவும் ஊக்கமளிக்கப்பட்டது, அனைத்து பரந்த சூழலை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரல அந்தத் தொழில்துறையில் மூத்த ஆண் தலைவர்களுடனான கலந்துரையாடல்களையும் உள்ளடக்கியது.
நிறுவனத்தின் நீண்டகால வணிக இலக்குகளை நீடிக்கச் செய்யவும் மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கவும் பாலின சமத்துவம் ஊக்குவிக்கிறது என்ற உண்மையை பல்வேறு உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன, எனினும் ஒரு பாலினச் சமத்துவம் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் தலைமைத்துவ அங்கீகாரங்களில் பெண்களுக்கு ஒரு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் தங்கள் முன்முயற்சிகளை அதிகரித்து வருகின்றன. 2017 ஆம் ஆண்டிற்கான வர்த்தகத்தில் மகளிர் என்ற, கிராண்ட் தோர்ன்டனின் உலக அளவிலான கணக்கெடுப்பு அறிக்கையின்படி, பெண்களைத் தலைமையாகக் கொண்ட குறைந்தபட்ச நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவதாக உள்ளது. உலகெங்கிலும் 36 பொருளாதாரங்களில் 5,500 வணிக நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வு, 41% வரை உள்ள இந்திய தொழில்துறையில் தலைமை பதவிகளில் பெண்கள் இல்லை என்று கூறுகிறது. மருந்தியல் துறையில் பெண் நிர்வாக இயக்குநர்களின் இருப்பு 7.69% மட்டுமே ஆகும். எவ்வாறாயினும், நலவாரிய பிரதிநிதித்துவத்தின் சமீபத்திய SEBI வழிகாட்டுதல்களுடன் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த ஊக்கமளிக்கின்ற பெண்களின் எண்ணிக்கையினால், இந்த புள்ளி விவரங்கள் மெதுவாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
UBM plc இன் CFO, மரினா வைட் கூறியபோது: "பணியிடத்தில் பாலின வேறுபாடு மற்றும் பன்முகத்தன்மை பற்றிய பிரச்சினை 'ஏன்' வருகிறது என்பது பற்றி அல்ல, ஆனால் 'எப்படி' வருகிறது என்பதை ஆய்வு செய்து - அதை இந்த அமைப்புக்குள் கொண்டுவந்து எப்படி கையாள்வது மற்றும் கட்டமைப்பது என்பதை தீர்மானிப்பதே இதற்கு தீர்வாக இருக்கும். அதேபோல, தற்போதைய இந்த டிஜிட்டல் உலகில் வேலை-வாழ்க்கை இரண்டின் சமநிலை பற்றிய கவலை அதிகம் இல்லை, அவை வேலை வாழ்க்கை இரண்டும் எவ்வாறு கலந்து ஒன்றுக்கொன்று முன்னேற்றதை அளிப்பதாகவும் அல்லது தடையை தருவதாகவும் இருக்கிறது என்பதை பொருத்தது. இதனை தனியாக மற்றும் தொழில்முறைசார்ந்து ஒன்றிணைக்க வேண்டும். இதே போல் உலகில் உள்ள மற்ற துறையிலும் கூட எடுத்துக்காட்டாக பொறியியல் துறையில் இருக்கும் பெண்கள், கப்பல் துறையில் உள்ள பெண்கள், தொழில்நுட்பத்தில் உள்ள பெண்கள் போன்றவற்றிலும் காணமுடியும்."
மேலும் அவர், "இந்த பாகுபாடு நுழைவு மட்டத்தில் என பார்க்கும் போது இடைவெளி அதிகமாக இல்லை, ஆனால் படிப்படியாக, மூத்த நிலைக்கு செல்லும்போது, இந்த பாலின இடைவெளி உள்ளது என்பதை எங்களால் காணமுடிகிறது. UBM plc இல், நாங்கள் பாலின இடைவெளி பிரச்சினையை அதன் அடிவேரிலிருந்து அடையாளம் காண்பது என்பதுடன் 'முக்கியத்துவம்', 'அபிவிருத்தி' மற்றும் 'இழப்பீடு' ஆகியவற்றை மையமாகக் கொண்ட முக்கிய கருப்பொருள்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட குழுக்களை KPI களுடன் இணைத்தல் மூலமாக கையாள்கிறோம்.
இந்த நிகழ்வில் நமது அழைப்பை ஏற்று இத்துறையின் சிறந்த சில தொழில் வல்லுனர்களான சிலர் வருகை புரிந்துள்ளனர், அவர்களில்-முன்னாள் அரசு தலைமை நிர்வாக அதிகாரி, முன்னாள் தலைமை செயலாளர், NITI ஆயோக், முன்னாள் செயலாளர்-திட்டமிடல் ஆணையம், Sindhushree Khullar; Savindu Kudrigikar, பிசினஸ் ஹெட் (தெற்காசியா), பார்மா, உணவு மற்றும் மருத்துவம், Dow Chemical International Pvt. Ltd.; Aparna Thomas, மூத்த இயக்குனர் - Communications & CSR (India & South Asia), Sanofi; Deepshikha Mukerji, பிராந்திய மனித வள இயக்குநர், நிறுவப்பட்ட மருந்துகள், Abbott; Pratima Reddy, இயக்குநர் - R&D சேவை, மெர்க் Consumer Health (CH) ஆளுமை மற்றும் வியூகம், மெர்க்; Rajiv Oza, HRBL - குளோபல் உற்பத்தி மற்றும் வழங்கல் (GMS), தெற்காசிய, GlaxoSmithKline Pharmaceuticals Ltd; Dr. Sofia Mumtaz, தலைவர்-சேவை மற்றும் சட்ட நிறுவனம், Lupin Ltd.; Ameera Shah, விளம்பரதாரர் & நிர்வாக இயக்குநர், Metropolis Healthcare Ltd.; மற்றும் Kanchana TK, டைரக்டர் ஜெனரல், இந்தியாவின் மருந்து தயாரிப்பாளர்களின் அமைப்பு மற்றும் Vasu Primlani, கார்ப்பரேட் பயிற்சியாளர் மற்றும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளர் ஆகியோர் அடங்குவர்.
'மருந்துதுறையில் மகளிர்: ஆசைப்படு, வழிநடத்து, எழுச்சியூட்டு' என்ற நிகழ்ச்சியில் பேசிய UBM இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் Mr. Yogesh Mudras கூறுகையில், "வேறுபடுத்துதல் மற்றும் இணைத்தல், குறிப்பாக பாலின சமத்துவம் என்பது இன்றைய பணியிடத்தில் வழங்கப்பட்டுள்ள ஒரு அடிப்படைக் கொள்கையாகும், ஆனால் துரதிருஷ்டவசமாக இன்னும் இந்தியாவில் மருந்து தயாரிப்பு துறையில் இது முழுவதும் பின்பற்றப்படுவதில்லை. 'மருந்துதுறை மாநாட்டில் பெண்கள்' என்பது India Pharma Week இன் ஒருங்கிணைந்த பகுதியில் இணைக்கப்பட்டதற்கு இந்த துறையில் குறைவான எண்ணிக்கையில் பெண்கள் தலைமைப்பதிகளில் இருப்பதே காரணம். இந்திய மருந்து துறையில் உள்ள 25,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில், பெண்களுக்கான தலைமைப்பதவி வேலை வாய்ப்புகள் தவிர மற்ற வேலை வாய்ப்புகள் என பெரும் காலியிடம் உள்ளது. எனினும், திறன்மிக்க இந்தியா அறிக்கையின்படி, மருந்துகள் மற்றும் சுகாதார துறைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்புக்குரிய வேலை வாய்ப்பு தற்போது 38.67 சதவீதமாக உள்ளது, பெண்களின் மொத்த வேலைவாய்ப்பு 28.28 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.
மேலும் அவர், " இதுபோன்ற வெளிப்படையான நன்மைகள் இருந்தாலும், பெரும்பாலான துறைகளில் தகுதிவாய்ந்த பெண்களை பணியமர்த்துதல், தக்கவைத்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவை தவறவிடப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு, கல்வி, மற்றும் அணுகுமுறை ஆகியவற்றை பரப்ப வேண்டும் என்பதே ஒரு முக்கிய செயலாகும். இது பெண் தலைவர்களுக்கும் அவர்களின் ஆண் நண்பர்களுக்கும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், பிற பெண்களை முன்னணிக்கு அழைத்துச் செல்வதற்கும் ஊக்குவிப்பதற்கும், மருந்து துறையில் உள்ள பெண்களுக்கு இது போன்ற மருத்துதுறையில் பெண்கள் என்ற மேடையில் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. " என்றார்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக உள்ளது, இது உலகெங்கிலும் இருந்து வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாகக் கொண்டிருக்கும் தளங்களில் கண்காட்சித் தொகுப்பு மூலம், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தி தொழில் துறைக்கு வழங்குகிறது. UBM இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகள் நடத்துகிறது; அதன் மூலம் பல தொழிற்துறை செங்குத்துத் தொகுதிகளில் வர்த்தகத்தை செயல்படுத்துகிறது. UBM ஆசியா கம்பெனி, UBM இந்தியாவிற்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. UBM ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட UBM plc க்குச் சொந்தமானது. ஆசியாவில் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக UBM ஆசியா உள்ளது மற்றும் சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக அமைப்பாளராகவும் உள்ளது.
UBM plc பற்றி:
UBM PLC உலகிலேயே மிகப்பெரிய pure-play B2B நிகழ்வுகள் அமைப்பாளராக உள்ளது. பெருகிய முறையில் டிஜிட்டல் உலகில், ஒரு இணைக்கும் அர்த்தமுள்ள, மனித நிலை இன்னும் முக்கியமானது இல்லை. UBM இல், எங்கள் ஆழ்ந்த அறிவு மற்றும் தொழில் துறை துறைகளுக்கு நாம் விரும்பும் மக்கள் அனுபவமிக்க மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க அனுமதிக்கிறோம். எமது நிகழ்வுகளில் மக்கள் உறவுகளைத் தொடர்ந்தும், நெருக்கமான ஒப்பந்தங்களை உருவாக்குவதோடு, தங்கள் வியாபாரத்தை வளர்க்கின்றனர். எங்கள் 3,750+ மக்கள், 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்தவர்கள், 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளுக்கு சேவை செய்கிறார்கள் - பேஷன் முதல் மருந்து பொருட்கள் வரை. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறமையான, ஆர்வமுள்ள மக்கள் மற்றும் சந்தை-முன்னணி நிகழ்வுகள் வணிக மக்களுக்கு தங்கள் இலட்சியங்களை அடைவதற்கு உற்சாகமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு, செல்லவும் http://www.ubm.com; UBM பெருநிறுவன செய்திக்கு, எங்களைப் பின்தொடர்க Twitter at @UBM, UBM Plc LinkedIn.
ஊடக தொடர்பு:
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
UBM India Pvt Ltd.
Share this article