கிரேட்டர் நொய்டா, இந்தியா, September 21, 2017 /PRNewswire/ --
- 45 நாடுகள் மற்றும் 750க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பு
- மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் முன்னிலையில் புகழ்பெற்ற இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகள்
- மூன்று நாள் அதிக தாக்கம் நிறைந்த மாநாடுகள் - 'Accelerating Momentum...From Ambition to Action' மாநாடு புதுமைகள், தொழில்நுட்பம், சவால்கள் மற்றும் முன்செல்வதற்கான வழியை சிறப்பித்துக் காட்டுகின்றது
UBM India இன்று Renewable Energy India (REI) கண்காட்சியின் 11ஆம் நிகழ்வை திறந்து வைத்தது, இது இந்தியன் எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் மூன்று நாள் (20 முதல் 22 செப்டம்பர் வரை) கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியை முக்கிய பிரமுகர்களான, Shri Upendra Tripathy, IAS, இடைக்கால பொது இயக்குநர், International Solar Alliance ( ISA ); Mr. Justin Wu, APACயின் தலைவர், Bloomberg New Energy Finance, ஹாங் காங்; Ms. Henriette Faergemann, ஆலோசகர் - சுற்றுச்சூழல், ஆற்றல், வானிலை மாற்றம், இந்தியாவுக்கான ஐரோப்பிய ஐக்கியத்தின் பிரதிநிதிக்குழு; Mr. Hans-Josef Fell, Energy Watch Group (EWG )இன் தலைவர் & ஜெர்மன் பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்; Mr. Naoki Tomotake, சர்வதேச விவகாரங்களுக்கான பொது இயக்குநர், NEDO, Japan; Mr. Rene Van Berkel, இந்தியாவுக்கான UNIDO பிரதிநிதி; Shri Anand Kumar, IAS,செயலாளர், புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் அமைச்சகம், இந்திய அரசாங்கம்; Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India; Mr. Michael Duck, மூத்த துணை தலைவர், UBM Asia மற்றும் Mr. Rajneesh Khattar, குழு இயக்குநர், UBM India உள்ளிட்ட பலரால் பெரும்திரளான துறையினரின் கூட்டத்திற்கு மத்தியில் திறப்புவிழா நடத்திவைக்கப்பட்டது.
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/556154/UBM_REI_2017_Logo.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/558846/UBM_India_Lamp_Lighting_Ceremony_of_REI_2017.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/558847/UBM_India_Inauguration_Ceremony_of_REI_2017.jpg )
இந்த கண்காட்சி உலகளாவிய சிறந்த நடைமுறைகளை விவாதித்தது மற்றும் சக்தி மற்றும் ஆற்றல் துறையில் மிகவும் அழுத்தம்நிறைந்த சவால்களுக்கான தீர்வுகளையும் நாடியது, இதற்காக சர்வதேச புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒரே மகத்தான தளத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது.
Renewable Energy India (REI) கண்காட்சியின் தொடக்கவிழாவின் போது, Anand Kumar, இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் அமைச்சகத்தின் செயலாளர் (MNRE), இவ்வாறு கூறினார், "பிரதமர் நரேந்திர மோதியின் கீழ், நாங்கள் எங்கள் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை 2022ஆம் ஆண்டில் 175GW என்ற அளவுக்கு அதிகரித்துள்ளோம். தொழில்நுட்ப மேம்பாடுகளுடன், மற்றும் சூரிய மற்றும் காற்று ஆற்றல்களின் விலை குறைப்புடன், நாங்கள் உறுதியாக இருப்பது மட்டுமில்லாமல், இந்த இலக்கை அடைவதோடு மட்டுமின்றி அதை மிஞ்சிவிடுவோம் என்பதிலும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம்.
சமீபத்திய ஆலோசனைகளில், இந்தியாவின் கடல்கரைக் காற்று மற்றும் நீர்சக்தி கொள்திறன்களை MNRE மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது, மற்றும் இந்த தொழில்நுட்பங்கள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் இலக்கின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது."
Kumar இந்தியாவின் 'மௌன புரட்சி' குறித்தும் பேசினார், இது தேசம் தனது மின்சார உற்பத்தி கொள்திறனையும் நுகர்வையும் விரைவாக அதிகரிப்பதைக் காணும். "முக்கியமான சவால் என்னவெனில்: மக்கள் செலுத்த தயாராக இருக்கும் விலையிலே, இந்தியாவில் அதிக ஆற்றல் நுகர்வை நாம் எப்படி செயல்படுத்த வேண்டும்?" என்று அவர் கேட்ட்தோடு, கூடுதலாக: "செலுத்த தயாராக இருப்பது மட்டுமல்லாமல், செலுத்தும் திறன் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்?" குறைவான எதிர்ப்பு இருக்கும் பாதையே, குறைவான கார்பன் செறிவு உள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். "இந்தியாவில் புதைபடிவ எரிபொருள்கள் குறைவாகவே உள்ளன. நாம் பெட்ரோலிய இறக்குமதியை சார்ந்து இருக்கிறோம். 1.25 பில்லியன் மக்களின் தேவையை நாம் பூர்த்தி செய்து அதை சந்திக்க வேண்டுமானால், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்கள் மட்டுமே ஒரே வழி."
Kumar தனது கவனத்தை உற்பத்திக்கு, குறிப்பாக சூரியசக்தி உற்பத்திக்கு நேராக திருப்பினார், அங்கே அவர், இந்தியாவின் திறமைகள் சிறப்பாக "எளிமையானதாக" இருக்கின்றன என்றார். "இந்தியாவில் பேட்டரிக்களுக்கான உற்பத்தி அடித்தளங்களை அமைக்க வேண்டும். தடையில்லாத சேமிப்பகத்தை நாம் அமைத்துக் கொண்டுவிட்டால், பின் மக்களுக்கு சிறப்புவாய்ந்த 24 மணிநேர இலவச மின்சக்தி என்பதை அடைந்துவிடலாம்" என்று முடிவாக கூறினார்.
REI யின் 11ஆம் நிகழ்வு புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஈர்ப்பு குறியீட்டில் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, யுஎஸ்ஏ, கொரியா, சீனா மற்றும் தாய்வான் உள்ளிட்ட பலவற்றின் பங்கேற்பைக் கண்டது. இந்த கண்காட்சியை புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் அமைச்சு, இந்திய அரசாங்கம் (MNRE), Energy Corporation of India Limited (SECI), Indian Renewable Energy Development Agency Ltd (IREDA), New Energy and Industrial Technology Development Organization (NEDO) Japan, Indo-German Energy Forum (IGEF), Bloomberg New Energy Finance (BNEF), Mercom Capital, உள்ளிட்டவை ஆதரித்தன.
உற்பத்தியாளர்கள், ஈபிசி மற்றும் சேவை வழங்குநர்களை ஒருங்கே கொண்டுவந்த இந்த கண்காட்சியில் 750க்கும் மேற்பட்ட பங்கேற்கும் கண்காட்சியாளர்கள் இடம்பெற்றனர். இவற்றில் உள்ளடங்கியோர் -- Adani Solar, Tata Power Solar, Azure Power, Sky Power, Canadian Solar, Huawei, Trina Solar, Jinko Solar, Siemens Gamesa, Vikram Solar, Waaree Energies, Mitsubishi, Delta Electronics, Panasonic, SMA, ABB, Kyocera, Sterling & Wilson, Mahindra Sustain, Applied Materials, POSCO மற்றும் Fronious, உள்ளிட்ட பலர். இந்த கண்காட்சியில் முன்னோடி நாடுகளின் முகாம்களும் ஜப்பான், சீனா, போலந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் தாய்வான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இடம்பெற்றன.
இந்த வர்த்தக கண்காட்சிக்கு முன்னதாக 3ஆம் Renewable Energy India விருதுகள் இடம்பெற்றன, அவை துறையில் உள்ள புதுமை மற்றும் சிறப்புத்தன்மையை அங்கீகரித்து, அவர்களுடைய திறமையை விளம்பரப்படுத்த இலக்கு வைத்து இருந்தன. இந்த விருதுகளுக்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் உற்பத்தி மற்றும் செயல்படுத்துதல் சமுதாயங்கள் இரண்டிலும் இருந்து போட்டியிடும் பெரும்திரளான துறைசார்ந்த பிரபலங்களைக் கொண்டு இருந்தது. இதில் 'RE கட்டணங்கள் வீழ்ச்சி அடையும் எதிர் காலத்தை விவரித்தல்'(Defining the Future in the Age of Falling RE Tariffs') என்பது மீதான புகழ்பெற்ற துறைசார்ந்த பேச்சாளர்களின் ஒரு பேனல் விவாதம் இடம்பெற்றது - Mr. Manu Srivastava, ஐஏஎஸ், முதன்மை செயலாளர், மத்திய பிரதேச அரசாங்கம், புதிய & புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறை மற்றும் தலைவர், Rewa Ultra Mega Solar Limited, Mr. K S Popli, தலைமை மேலாண்மை இயக்குநர், IREDA; Mr. Sunil Jain, தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குநர், Hero Future Energies; Mr. P Vinay Kumar, முதன்மை இயக்க அதிகாரி, Greenko Group; Mr. G Raghuma Reddy, தலைமை மேலாண்மை இயக்குநர், Telangana Southern Power Distribution Company Ltd.; Mr. Pawan Agarwal, துணைத் தலைவர் - கார்ப்பரேட் நிதி மற்றும் தேசிய தலைவர் - புதுப்பிக்கக்கூடிய ஆற்றல், YES Bank மற்றும் Mr. Dilip Nigam, ஆலோசகர், MNRE ஆகியோர் பங்குபெற்றனர்.
மூன்று நாள் நடைபெறும் மாநாட்டின் உட்கருத்து
' உத்வேகத்தை தூண்டுகின்ற . . . லட்சியத்திலிருந்து செயலாக்கம் வரை' என்கிற கருத்தியலில் ஒரு சக்திவாய்ந்த மூன்று நாள் மாநாடு தொடங்கியது, இதில் MNRE, ISA, United Nations Industrial Development Organization (UNIDO), IGEF, MNRE - EU Technical Cell, Bloomberg New Energy Finance, PV Magazine, Skill Council for Green Jobs, மற்றும் Mercom Capital ஆகியவற்றின் அறிவு செறிந்த அமர்வுகள் இடம்பெற்றன.
நாள் 1இன் சிறப்பம்சங்களில் உள்ளடங்கியவை (EXIM வங்கி மற்றும் ஆற்றல் பஞ்சம்: 100 வங்கிமயமாக்கக்கூடிய சூரியசக்தி செயல்திட்டங்களுக்கு எப்படி நிதியளிப்பது'(EXIM bank and Energy Poverty: How to finance 100 bankable solar projects') போன்ற தலைப்புகளின் மீது கவனம் செலுத்த International Solar Alliance (ISA) உடைய நினைவூட்டல் அமர்வுகள் இடம்பெற்றன. ISAவின் கீழ் இடம்பெற்றுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில், கானாவில் சூரியசக்தி பயன்பாட்டை உயர்த்துதல், உகாண்டாவில் விவசாயத்திற்கான பயன்பாடுகள், சூரியசக்தி செயல்திட்டங்கள் மற்றும் சூரியசக்தி சிறு க்ரிட்டுகளுக்கு அளவுகோலின்படி கட்டுப்படியாகும் நிதி; ஆற்றல் பஞ்சத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவது எப்படி? நீர்பாசன பம்புகளுக்கான ISA உடைய உலகளாவிய டெண்டரின் மூலம் வங்காளதேசம் எவ்வாறு பயனடையலாம், என்பது உள்ளிட்ட தற்போதைய போக்குள்ள தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.
கண்காட்சியின் நாள் 1இல் பிற கருத்தாழமிக்க அமர்வுகளான - 'கடல்கரை காற்று சக்தி' வழங்கியவர் FOWPI; 'இந்தியா: புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறையின் ஒரு செல்லக் குழந்தை'; 'தேசங்களால் திறன்படுத்துதல்கள்'; 'எண்களால் திறன்படுத்துதல்'; 'சூரியசக்தி பிவி கூரையின் மேற்பகுதிக்கான முக்கிய சந்தைகள்', 'இந்திய -ஜெர்மானிய ஆற்றல் மன்றத்தின் சவால்கள்'; 'நாளைய காற்றுகள்'; இந்திய சூரியசக்தி சந்தை - முன்னோக்கிய பாதை', வழங்கியவர்கள் Mercom Communications மற்றும் 'சூரியசக்தி & காற்று சொத்து நிர்வாகத்தில் செயல்பாட்டு சிறப்புத்தன்மையை உந்துதல்' வழங்கியவர்கள் 3E & WISE Energy ஆகியவை இடம்பெற்றன.
ஒரு சக்திவாய்ந்த பலகையறை அமர்வு -- CEO Roundtable, 'குறைந்த கார்பன் மின்சாரத்திற்கான சாலை வரைபடம்' மீதான பார்வை விவாதம் மற்றும் Standards and Research, Skill Council for Green Jobs (SCGJ) வழங்கிய ஒரு வடிவமைப்பு சவால் ஆகியவை நாள் 1இன் பிற சிறப்பம்சங்கள் ஆகும்.
நாள் 2 இல் மற்றும் ஒரு பலகையறை அமர்வு நிதித் தலைவர்கள் மன்றத்தின் மீது இடம்பெறும் இதை BRIDGE TO INDIA மத்தியஸ்தம் செய்யும். 'கூரைக்குமேலுள்ள சூரியசக்தி….புள்ளிகளை இணைத்தல்' ; 'சேமிப்பு அலைக்கற்றை'; 'முதலீடுகளின் இடர்களை நீக்குதல்'; 'ராஜஸ்தான் மாநிலத்தின் சாதகம் ராஜஸ்தானுக்கு'; 'சூர்ய நமஸ்கார்:சூரியனில் இருந்து சம்பாதிக்கவும்'; 'புதுமை சந்திப்பு'; 'மைக்ரோ க்ரிட்ஸ்: கருவிகளை உள்ளூருக்கேற்றவாறு மாற்றி வாய்ப்புகளை அதிகரித்தல்'; 'ஸ்மார்ட் நகரங்களின் ஸ்மார்ட் மின்சக்தி'; 'சூரியசக்தி பேனலின் உடற்கூறியல்' மற்றும் 'தங்க முக்கோணம்: ஈபீசி, பிஓஎஸ் மற்றும் மாட்யூல் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்தல் ' உள்ளிட்ட பல அமர்வுகள் இடம்பெறும், இது மாநாட்டில் நாள் 2 மற்றும் நாள் 3இல் இடம்பெறும்.
Renewable Energy India கண்காட்சியின் 11ஆம் நிகழ்வின் திறப்புவிழாவின் போது பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "2022ஆம் ஆண்டில் 175GW புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை உற்பத்தி செய்வதாக இந்தியா தனக்கே ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. அதிக சுங்க வரியை எதிர்பார்த்து, சூரியசக்தி மாட்யூல்கள் மற்றும் தொடர்பான கருவிகளை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அளவுகளில் ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன, இதன் மூலம் குறைந்த பரப்பளவிலும் கட்டமைப்பிலும் இலக்கை அடைய உதவுகின்றன. இந்தியா சுயசார்புத்தன்மையை பெறுவதற்கான முயற்சியில் பல சிறு நிறுவன்ங்களும் புதுமைகள் மூலம் சிறப்புத்தன்மையை அடைவதை இத்துறை காண்கின்றது. சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2017இன் H1 சமயத்தில் 4,765MW அளவுக்கு கூடுதல் கொள்திறனுக்கு இந்திய சூரியசக்தி துறை விரைவாக வளர்ந்துள்ளது. இதுதவிர, இந்த ஆண்டின் 'புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தேசிய ஈர்ப்பு அளவுகோல்'இல் யுஎஸ்ஏ-வை கடந்து மூன்றாம் நிலையில் இருந்து இந்தியா சமீபத்தில் இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த பின்னணியில், , UBM India REI கண்காட்சி மூலமாக துறை, அரசாங்கம் மற்றும் முதலீட்டாளர்களின் பிணைப்பை மீண்டும் வலிமைப்படுத்த உதவுகின்றது. பன்னாட்டு பங்கேற்பு, சிறந்த தொழில்நுட்பம், செலவுக்கேற்ற தீர்வுகள், துறைசார்ந்த தலைவர்கள் மற்றும் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகளின் பங்கேற்பு, முதன்மையான உலகளாவிய பிராண்டுகள் தங்கள் தயாரிப்பு மற்றும் தீர்வு வழங்குதல்களை காட்சிப்படுத்துதல், மற்றும் உள்ளடக்கம் மிகுந்த மாநாடுகள் ஆகியவற்றை கொண்டு வந்து ஒரு உந்துசக்தியாக இந்த கண்காட்சி செயல்பட்டு இருக்கிறது T."
REI கண்காட்சி 2017இல் புதிதாக என்ன இருக்கிறது:
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in .
UBM plc பற்றி:
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு செல்லுங்கள் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு எங்களை டிவிட்டரில் பின் தொடருங்கள் @UBM ,UBM Plc LinkedIn.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article