சென்னை, March 14, 2017 /PRNewswire/ --
MJDMA மற்றும் UBM India வழங்கிய B2B ரத்தினம் மற்றும் நகை ஒரு மகா பொருட்காட்சி முக்கிய போக்குகள் மற்றும் தொழிற்துறை கருத்துக்கள் மீது சுடரொளியை வீசச்செய்தது
Madras Jewellers Diamond Merchants Association (MJDMA) மற்றும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் UBM India ஒருங்கிணைத்த Gem & Jewellery India International Exhibition (GJIIE) தனது 13வது நிகழ்வை இன்று சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர் Mr. KC Veeramani, மதிப்பிற்குரிய வர்த்தக வரிகள் மற்றும் பதிவுசெய்தல் அமைச்சர் அவர்களும் பிற முக்கிய பிரதிநிதிகளான Mr. Jayantilal Chalani, தலைவர், MJDMA, Mr. Rajesh Vummidi, தலைவர், MJDMA - GJIIE, Mr. Rajendra Jain, மேலாண்மை இயக்குநர், Swarovski Gems, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India மற்றும் Mr. Abhjit Mukherjee, குழு இயக்குநர், UBM India இந்த காட்சியை பெரும் திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியிலே தொடங்கிவைத்தனர்.
(Photo: http://mma.prnewswire.com/media/477257/UBM1.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/477271/UBM2.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
மூன்று நாள் GJIIE (மார்ச் 10 முதல்12 வரை) தான் மொத்த வியாபாரிகள், சில்லரை வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை தயாரிப்பாளர்கள், இயந்திரம் உற்பத்திசெய்பவர்கள், வைரம், ரத்தினக்கல், முத்து விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலையுயர்ந்த உலோகம் மற்றும் நகை பதிக்கும் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், மற்றும் வர்த்தக மற்றும் அரசாங்க அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகள் என 300க்கும் மேற்பட்டவர்களின் பங்கேற்பை கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ரத்தினக்கற்கள் மற்றும் நகை B2B கண்காட்சி ஆகும். இந்து இந்திய நகை சந்தைக்கான ஒரு நுழைவாயிலாக இருக்கிறது, இதில் தென்னிந்தியாவின் திறமை மீது சிறப்பான கவனம் செலுத்தப்பட்டு, வாங்குநர்களும் விநியோகஸ்தர்களும் இணையவும், பிணைப்பை ஏற்படுத்தவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், வரவிருக்கும் போக்குகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் அற்புதமான தளத்தை அளிக்கிறது. இக்கண்காட்சி நல்ல புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாங்குநர்களை தொடர்ந்து ஈர்த்து, கண்காட்சியின் நிலையை தொழிற்துறைக்கான ஒரு நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பப்படுகின்ற வளம்சேர்க்கும் கேந்திரமாக மறுவலிமைப்படுத்துகின்றது. டயர் I, II மற்றும் III நகரங்களுடன் கூடுதலாக, இந்த கண்காட்சியானது நியூயார்க், துபாய், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து வரும் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவம் இருந்தது, இது இந்நிகழ்வு சர்வதேச அளவில் சென்றடைந்து இருப்பதையும் GJIIE 2017 உடைய முன்னிலையையும் வலியுறுத்துகிறது.
கண்காட்டிக்குப் பிறகு, கண்காட்சியாளர்கள் வைரங்கள், முத்துக்கள், ரத்தினக்கற்கள், பதித்த நகைகள், கோவில் நாக்ஷி நகை, கல் பதித்த நகை மற்றும் மாங்கா மாலை மற்றும் மச்சி வடிவமைப்பு போன்ற திருமண நகைகள் உள்ளிட்ட தனித்துவமான தென்னிந்திய தங்க நகைகள் உள்ளிட்ட விற்பனை பொருட்களின் திரள் காட்சிப்படுத்தப்பட்டது. உற்பத்தி செயல்முறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய பிற தயாரிப்புகளும் சேவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த ஆண்டு கண்காட்சியிலே பங்கேற்ற சில குறிப்பிடத்தக்க கண்காட்சியாளர்களில் ஹைதராபாத், பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர், கொல்கத்தா, மும்பை, ஜெய்பூர், தில்லி, அகமதாபாத், சூரத் மற்றும் பல நகரங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்கும். கண்காட்சியாளர்களின் பெயர்களில் Mohanlal Jewellers Pvt. Ltd, Laxmi Jewellery Chennai Pvt. Ltd, Jai Gulab Dev Jewellers, JC Jewellers (சென்னை) Pvt Ltd, Mukti gold, Krizz, Emerald Jewel Industry India Ltd, Unique Chain Pvt Ltd, White Fire Diamonds India Pvt Ltd, Prakash Gold Palace Pvt. Ltd, Vijay Gems & Jewellery, Grurukrupa Exports, Peeyar Manufacturers, Gitanjali Jewellery Retail Limited, Swarnshilp Chains & Jewellers Pvt Ltd, Chain N Chains, ORO, JKS Jewels, Anmol Swarn, Matushree Gold மற்றும் Mehta Gold உள்ளிட்ட பல இடம்பெற்றன.
இது தொடங்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக, GJIIE ஒரு அனைத்து தமிழ்நாடு தலைவர் மற்றும் செயலாளர் கூடுகை மற்றும் முக்கிய கழகங்கள் மற்றும் தலைமை அமைப்புகளுடனான GJF மண்டலை கூடுகையையும் நடத்தி இந்த மாநிலத்தில் இந்த வணிகத்திற்கான முக்கிய சாதனைகள் மற்றும் சவால்களை விவாதிக்கும். தங்கத்தையும் நகையையும் ஒரு சொத்து வகுப்பாக பார்க்காமல், குறைவாக கூறப்பட்ட, ஸ்டைலான அணியக்கூடிய நகைகளை விரும்பக்கூடிய இளம் நுகர்வோருடன், இந்த கண்காட்சி GIA வழங்கும் தனது இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்குடன் இந்த வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முக்கிய கருத்துக்களை வழங்கும். இயற்கை கற்களுக்கு ஒப்பான ஒரே மாதிரியான தோற்றமும், ரசாயன, இயல்ரீதியான மற்றும் பார்வைக்கான தன்மைகளையும் உடைய ஆய்வகத்ஹில் உருவாக்கப்பட்ட கற்களின் திரளை ''ரத்தினக்கலியல் மற்றும் செயற்கை மீதான சுடரொளி" காட்சிப்படுத்துகிறது. இதுதவிர, MSME மற்றும் SBI 'நகைகளில் திட்டங்கள்' மற்றும் 'உலோகமும் கடனும்' என்கிற தலைப்புகளில் ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்குகளோடு கூடுதலாக, விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் கற்களில் வணிகம் செய்ய நாடுகிறவர்களுக்கு கணிசமான தெரிவுகளையும் வழங்குவார்கள். இந்த துறையிலே புதிய உலகளாவிய ஆர்டர் என்பது மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் நவீன, சர்வதேச போக்குகளை பின்பற்றுவதே ஆகும், நாள் 2இல் 'புதுமையான சிந்தனை' மற்றும் 'நகை தொழில்நுட்ப உருமாற்றம்' மீதான பேனல் விவாதம் இந்த துறையின் புதிய முகங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்படும்.
இந்த கண்காட்சியானது முதல் முறையாக GJIIE இல் இடம்பெற்று தனித்துவமான வடிவமைப்புகளை காட்சிப்படுத்தும் 'Innovative Zone' என்னும் சிறப்பான களஞ்சியத்தின் மூலமாக தோற்றம் மற்றும் விருப்ப அளவிலும் அதிக மதிப்பை பெற்றுள்ளது. இது தவிர, 'Hall of Fame', என்னும் ஒரு கண்கவரும் விலைமதிக்கப்பெற்ற உலோகங்கள் மற்றும் ரத்தின கற்களினால் செய்யப்பட்ட பிரபலமான அசல் பொருட்களின் சிறிய மாதிரிகளின் காட்சி ஒன்று கண்காட்சியில் எல்லோராலும் பேசப்பட்டதாக மாறியது, அதோடு மின்னும் படிகக்கற்களின் புதிய தொகுப்பை காட்சிப்படுத்திய 'Swarowski Gallery' ஒன்றும் பேசப்பட்டது. நாள் 2இன் நாகரீக அணிவகுப்பானது வியக்கவைக்கும் நகைகளை காட்சிப்படுத்தி, இந்த காலகட்டத்தின் போக்குகளை படம்பிடித்துக் காட்டும், இதை தொடர்ந்து கண்காட்சியாளர்களுக்கு ஒரு நெட்வொர்க்கிங் இரவு இடம்பெறும்.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகை கண்காட்சி GJIIE 2017 தொடக்க விழாவில் பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "இந்திய ரத்தினக்கற்கள் மற்றும் நகை துறையானது இந்திய பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை ஆகும், மற்றும் அது ஒரு மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதமான (CAGR) 15.95 சதவிகிதத்தில் 2014-02019 காலக்கட்டத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த துறையிலே அபரிவிதமான வாய்ப்புகள் இருக்கின்றன, இது ஏற்றுமதி சார்ந்ததாகவும், தொழிலாளர் அதிகமாகவும் இருக்கும் துறையாக இருப்பதால், உலக நகை சந்தையில் இந்தியாவை ஒரு கேந்திரமாக மாற்றுகிறது. பணமதிப்பு நீக்கம் மற்றும் GST கொள்கைகளை எதிரொலிக்கும் நகை துறையானது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் பெரும்பான்மையான நுகர்வோரிடத்திலும் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறது. இந்த மாற்றங்களினால் ஏற்பட்ட சவால்களை குறித்து விவாதிக்க ஒரே தளத்தின் கீழ் ஒன்றுகூடுவது முக்கியமானதாகும். நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய கண்காட்சியாக, நகை செய்யும் கலை மீது பற்றுதலாக இருக்கும் வாங்குநர்களும் கண்காட்சியாளர்களும் ஒரு ஒன்றாக வாழ்வதற்கான இந்த சிறிய சூழலை உருவாக்குவதில் GJIIE பெருமை அடைகிறது."
" விலையுயர்ந்த மற்றும் பகுதி விலையுயர்ந்த பதிக்கப்பட்ட நகைகள், கைவினை நகைகள், வார்ப்பு நகை மற்றும் எடைகுறைந்த தங்க நகை ஆகிய வற்றின் கேந்திரமாக தென்னிந்தியா திகழ்கின்றது. GJIIE மூலமாக UBM India நகைகள், வைரம், முத்து மற்றும் ரத்தினக்கல் விநியோகஸ்தர்கள் ஒன்றுகூடி, உரையாடி தெற்குப் பகுதியை சார்ந்த உள்ளுர் மற்றும் சர்வதேச முக்கிய வாங்குநர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தவும் ஒரு சர்வதேச வணிக தளத்தை அளிக்க முயற்சிக்கிறது. இந்த பகுதியிலே நகை துறைக்கான தரநிலைகளை உயர்த்தவும் வணிகத்தை பெருக்கவும் முயற்சிக்கிறது." என்று அவர் மேலும் கூறினார்.
GJIIE உடைய 13ஆம் நிகழ்வின் போது பேசிய, Mr. Jayantilal Chalani, தலைவர், MJDMA இவ்வாறு கூறினார், "குறைந்த விலை மற்றும் அதிக திறன்வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பது ஆகியவற்றின் காரணத்தால் இந்தியா உலக நகை சந்தையின் மையமாக கருதப்படுகின்றது. இந்தியாவின் ரத்தினக்கற்கள் மற்றும் நகை சந்தையானது 5,00,000க்கும் அதிகமான நிறுவனங்களின் தாயகம் ஆகும், இதில் பெரும்பாலானவை சிறு நிறுவனங்களே. GJIIE என்பது வணிகத்தினால் வணிகத்திற்காக செய்யப்படும் ஒரு முயற்சி. டயர் 2 மற்றும் டயர் 3 பட்டணங்கள் உட்பட, நாட்டின் உள்ளார்ந்த பகுதிகளில் இருந்து இந்த கண்காட்சியில் பங்கேற்பு இருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்."
"அக்டோபர் 2016இல் கடந்த நிகழ்வின்போது பெற்ற பெருத்த வரவேற்புடன், அடுத்து வர இருக்கும் GJIIE உடைய 13ஆம் நிகழ்வானது மகத்தான தொழில் வாய்ப்புகளுடன் ஒரு பெரிய நிகழ்வாக இருக்கப்போகிறச்து. ஒரு ஒருங்கிணைப்பாளராக, MJDMA மற்றும் UBM India எப்போதுமே பெருநகரங்களிலும், அதே நேரம் இரண்டு மற்றும் மூன்று டையர் நகரங்களிலும் தொடர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் மகத்தான சாலை கண்காட்சிகள் நடத்தி சிறந்த வாடிக்கையாளர்களை பெற இலக்கு வைப்பார்கள்," என்று கூறினார்.
சுமார் முப்பது ஆண்டுகளாக நகை துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக UBM இருந்து வருகிறது, தற்போது உலகெங்கிலும் புகழ்பெற்ற நகை கண்காட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. GJIIE என்பது UBM India ஆண்டு முழுவதும் நடத்தும் ஒரு நான்கு நகர நகை கண்காட்சிகளில் (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் தில்லி) ஒன்றாகும்.
GJIIE 2017இல் தொழிற்துறை கருத்துக்கள் மற்றும் வெளியீடுகள்/காட்சிகள்:
Ankit Jain, இயக்குநர், Matushree Gold LLP:
"பணமதிப்புநீக்கலில் இருந்து நகை துறை பரினமித்து உள்ளது மற்றும் துறைக்கு ஒரு நெறிசார்ந்த கட்டமைப்பையும் கொண்டு வந்துள்ளது. நாங்கள் 2014 முதல் GJIIE இல் ஒரு பகுதியாக இருந்து வருகிறோம் மற்றும் இந்த துறை மாறுவதையும் வளர்வதையும் கண்டுள்ளோம். இந்த ஆண்டும் அதே அளவிலான தொழில்முறையையும் தொழிற்துறை நிபுணர்களையும் இந்த கண்காட்சியிலே காண்கிறோம். நாங்கள் எங்கள் NAKASHA தொகுப்பையும் தனித்டுவமான BALAJI சிலையையும் காட்சிப்படுத்துகிறோம்"
Mukesh Kumar, இயக்குநர்,Prakash Gold Palace Pvt Ltd:
"தொடக்கம் முதலாகவே நாங்கள் GJIIE உடன் இணைந்து இருக்கிறோம் மற்றும் ஆண்டுதோறும் பார்வையாளர்களை பொருத்தவரை எங்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தொழிலை பொருத்தவரை GJIIE உடன் இணைந்ததில் இருந்து இந்நிறுவனம் வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்கள் எந்த வகையான மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்; பணமதிப்பு நீக்கல் எப்போதுமே வாங்குநர்-விற்பனையாளர் தொழிலை பாதிக்கப்போவதே இல்லை. 2017ஆம் ஆண்டுக்காண தொழில் வேகம் குறைந்ததாக இருக்கலாம், ஆனால் 2018ஆம் ஆண்டு அது வேகம் பிடிக்கும் என்பது உறுதி."
Karan Bothta, இயக்குநர், White Fire Diamonds India Pvt Ltd:
"ரத்தினக்கல் மற்றும் நகை துறையானது எப்போதுமே 'ஜொலிக்கக்கூடியது'. ஒரு குழுவாக நாங்கள் பொருளாதாரத்திற்கும் சாமான்ய மனிதனின் சேமிப்பிற்கும் அதிகமாக பங்களிக்கிறோம். புதுமை, புதிய சந்தைப்படுத்தல் நுட்பங்கள் மற்றும் செலவிடும்தன்மை ஆகியவற்றின் மூலம் நம் கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இந்த துறையின் வளர்ச்சி இருக்கிறது. இந்த தளத்தின் மூலம், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலரை சந்தித்து இந்த துறை குறித்த எங்கள் கண்ணோட்டங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் மிக குறைந்த எடை தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் எங்கள் மின்னணு பட்டியலை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம், இந்த மின்னணு பட்டியல் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிடைக்கும், இதில் 4000க்கும் மேற்பட்ட வைர நகை வடிவமைப்புகள் இருக்கின்றன. பணமதிப்புநீக்கல் என்பது ஒரு தற்காலிக சிந்தனை மட்டுமே, பரிவர்த்தனைகள் அதிக வெளிப்படையாக மாறும்போது, ஒரு தனிநபர் தன் கடின உழைப்புக்காக நிச்சயம் வெகுமதி பெறுவார். "
Prem Mehra, மேலாண்மை இயக்குநர், Unique Chain Pvt Ltd:
"8 ஆண்டுகளாக நாங்கள் GJIIE உடன் ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறோம். எப்போதுமே நாங்கள் உண்மையான வாங்குநர்களை பொருத்தவரை நேர்மறையான பதிலையே பெற்றுள்ளோம், இந்த ஆண்டும் அதையே எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு இந்த தளத்தின் மூலமாக நாங்கள் எங்களுடைய தனித்துவமான வடிவங்களை காட்சிப்படுத்துகிறோம்."
Ravi Chandran, இயக்குநர், CNB Diamonds:
"இது GJIIE உடனான எங்களுடைய 7ஆம் ஆண்டு இணைப்பாக இருக்கிறது மற்றும் அளிக்கப்பட்ட தளத்திலே நாங்கள் எங்கள் மூடப்பட்ட அமைப்பு வைர நகைகளை காட்சிப்படுத்துகிறோம். நாங்கள் ஒரு வாய்ப்பு சார்ந்த நிகழ்வை எதிர்பார்க்கிறோம் மற்றும் பணமதிப்பு நீக்கலுக்குப் பிறகு ஒரு புதிய வலிமையான சந்தையை பார்க்கிறோம்."
Yogandra Prakash, Suman:
" 3வது ஆண்டாக GJIIE உடைய ஒரு பகுதியாக இருப்பதில் உற்சாகம் அடைகிறோம் மற்றும் ஒரு நல்ல அனுபவத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த தளத்தை நாங்கள் எங்கள் தனித்துவமான வடிவமைப்புகளை இந்தியா போன்ற வளரும் சந்தையில் காட்டுவதற்காக பயன்படுத்துகிறோம். பணமதிப்பு நீக்கலுக்குப் பிறகு சந்தையை குறித்து மிகவும் நேர்மறையாக நாங்கள் இருக்கிறோம் மற்றும் மகத்தான நெட்வொர்க்கிங் வாய்ப்புக்காக எதிர்பார்க்கிறோம். "
Neeral Shobhawat, இயக்குநர், Maharaja Chains:
" GJIIE இல் முதல் முறையாக நாங்கள் பங்குபெறுகிறோம். புதிய போக்குகளுக்கு ஏற்ப நாங்கள் பல்வேறு நகை வடிவமைப்புகளை காட்சிப்படுத்த இருக்கிறோம். பணமதிப்புநீக்கல் என்பது பிரதமர் எடுத்துள்ள மகத்தான நடவடிக்கை என்று நாங்கள் நினைக்கிறோம் மற்றும் இந்த தீர்மானத்தினால் மகிழ்ச்சி அடைகிறோம். இது எல்லா வகையான கருப்புப்பணத்தையும் நீக்கிவிடும்."
Vikaram Mehta, உரிமையாளர், Mehta Gold & Diamonds:
" UBM India' உடைய GJIIE இல் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக பங்கேற்று வருகிறோம். இந்த நிகழ்வின் உதவியுடன், நாங்கள் எங்கள் தொழிலில் மகத்தான வளர்ச்சியையும் புதிய வாடிக்கையாளர்களையும் கண்டுள்ளோம். இந்த ஆண்டு நாங்கள் எங்கள் தனித்டுவமான KUNDAN NAKASHA தொகுப்பை வெளியிடுகிறோம். பணமதிப்புநீக்கல் சந்தையை பாதிக்கப்போவது இல்லை, உண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இது சிறப்பானதாகும்."
Suresh Khatri, இயக்குநர்,Mohanlal Jewellers Pvt Ltd:
"கடந்த 7 ஆண்டுகளாக GJIIE நிகழ்வின் பெருமைக்குரிய பங்கேற்பாளர்களாக நாங்கள் இருந்துவருகிறோம். GJIIE எப்போதுமே தங்கள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுடன் எங்களை மெய்மறக்கச் செய்துவிடுகின்றனர். இந்த ஆண்டு நாங்கள் நவீன நகை வடிவமைப்புகளை தற்போதுள்ள போக்குகளுக்கு ஏற்ப காட்சிப்படுத்துகிறோம், அதில் வளையல்கள் மற்றும் சங்கிலிகளின் வல்வேறுபட்ட தொகுப்பும் உண்டு. பணமதிப்புநீக்கல் காரணமாக இந்த சந்தை எந்த பெரிய சவாள்களையும் சந்திக்காது."
Monil Pahuja, நிர்வாக இயக்குநர், Damara Gold Pvt. Ltd:
"ஒரு நவநாகரீக அறிக்கையாக ரத்தினக்கல் மற்றும் நகை துறை இளைஞர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளுதலை பெற்று வருகிறது, மற்றும் அதன் வளர்ச்சியானது வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு வர்த்தக கண்காட்சியுமே வேற்று மாநில வாங்குநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வருவதற்கான வாய்ப்பை அளித்து, துறையின் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த தங்கள் கண்ணோட்டங்களை பகிர்ந்துகொள்வதற்கான ஒரு ஜன்னலை திறந்து வைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, எங்களுடைய பல்வேறு ஆலைகளில் நவீன தொழில்நுட்பங்களையே முன்னோடியாக நாங்கள் எப்போதும் பயன்படுத்துவதால், முன்னணி ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கு ஏற்ப இந்திய உற்பத்தியாளர்கள் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு சர்வதேச சந்தையில் பலனளிக்கும்படியாக போட்டியிட வேண்டும் என்று நாங்கள் வலிமையாக நம்புகிறோம். சில காலத்திற்கு பணமதிப்புநீக்கல் சில்லரை வர்த்தகத்தை பாதித்தது ஏனென்றால் இந்திய வாங்குநர்கள் தங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு ரொக்கத்தை பயன்படுத்தியே பழகியவர்கள். இருப்பினும், டிஜிட்டல் முதன்முயற்சி மெதுவாக சராசரி வாங்குநரிடம் பரீட்சயமாகி வருகிறது, மற்றும் கடந்த காலாண்டில் தங்கம் ஏற்றுமதி அதிகரிப்பு எதையாகிலும் வலியுறுத்துகிறது என்றால் பாதகமான விளைவுகள் கடந்துசென்றுவிட்டன என்பதை தான் உணர்ந்துகின்றன."
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
UBM plc பற்றி
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல் மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவை செய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு, செல்லுங்கள் http://www.ubm.com
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-2261727000
UBM India
Share this article