புதுதில்லி, August 30, 2016 /PRNewswire/ --
- DOTA 2 மற்றும் CS - ஸின் பிரமாண்டத்தில் ஒன்றான ROG Masters APAC: GO போட்டிகள் நோக்கி
- மொத்தப் பரிசுப் பணம் 200,000 டாலர்கள். இந்திய அணிகளுக்கான பதிவு ஆரம்பம்
கேமிங் தொழில்துறையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ASUS, ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் ROG மாஸ்டர்ஸின் அறிமுகத்தை அறிவிக்கிறது. இந்தியாவிலும், ஆசியாவிலும் உள்ள வளர்ந்து வரும் ஒவ்வொரு கேமர்களின் திறமையை உலககெங்கும் உள்ள கேமிங் சமூகத்துக்குக் காட்சிப்படுத்துவதற்கு இந்த போட்டி ஒரு மேடை அமைத்துத் தருகிறது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் போட்டி என்கிற குறிக்கோளில் வருடாவருடம் ASUS ROG Masters -ஐ நடத்தும். ROG Masters APAC ஓசியானியா (OCE) (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து), கிழக்கு ஆசியா (EA)(ஜப்பான், தைவான், கொரியா, ஹாங்காங், மெக்காவ்), தென் கிழக்கு ஆசியா (SEA)(இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மியான்மார், கம்போடியா), சீனா (CN), இறுதியாக ஆசியாவின் பிறபகுதிகள் (ROA) (இந்தியா, பங்களாதேஷ், நேபாள், ஸ்ரீலங்கா, மால்தீவ்ஸ்) என ஐந்து பிராந்தியங்களை உள்ளடக்கியதாகும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160829/10153278 )
மொத்தப்பரிசு 200,000 அமெரிக்க டாலர்களுடன் இந்தப் போட்டி இரண்டு பிராந்திய ஆன்லைன் `இண்டியா குவாலிஃபையர்ஸை'யும் கொண்டிருக்கும். இதனால் முன்னணி அணிகள் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் அணிகளும் சிறந்த அணிகளுக்கு எதிராக போட்டியிட்டு அவர்களது திறமையைக் காட்டுவதை உறுதிப்படுத்தும். `ROG Masters India Qualifiers - I' -க்கான பதிவு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. `India Qualifier - (இந்தியா தகுதிச்சுற்று -1)', `India Qualifier -2(இந்தியா தகுதிச் சுற்று-2)' ல் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக ROG Masters ROA (ஆசியாவின் பிறபகுதிகள்) -ன் இரண்டாவது கட்டத்துக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். மாபெரும் இறுதிப் போட்டி - ஆஃப்லைன் நிகழ்வு - மலேசியாவின் கோலலம்பூரில் நவம்பர் 12, 13 தேதிகளில் நடைபெறும்.
Mr. Peter Chang, பிராந்தியத் தலைவர், தெற்கு ஆசியா & தேசிய மேலாளர், சிஸ்ட்டம் பிசினஸ் குரூப், ASUS India, "இந்தியாவில் கேமிங் திறமை அதிகமிருக்கிறது, இந்த மாதிரியான மேடைகளில் ஒவ்வொரு கேமருக்கும் சர்வதேச அரங்கில் பெரிய அளவில் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. இந்தியா தகுதிச் சுற்றுகள் இரண்டு இருப்பதால் தொழில்வல்லமை மிக்க முன்னணி அணியினர் மட்டுமல்லாமல் வளர்ந்துவரக்கூடிய திறமைமிக்க அணிகளும் சிறந்த அணிகளுக்கு எதிராக போட்டியிட வாய்ப்பிருப்பதை இது உறுதி செய்கிறது. இந்த முறையில், ஒரு அணி போட்டியில் முன்னேறிச் செல்ல மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், ஆசியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ROG Masters முன்னணி கேமிங் நிகழ்வாக இருக்கும் என நாங்கள் நம்புவதோடு இந்திய பெர்சனல் கம்ப்யூட்டர் கேமிங் தொழிலையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்' என்று கூறினார்.
APAC ROG Masters போட்டிக்குத் தகுதி பெற ROG Masters India Qualifiers ஒரு அணிக்கு அதிகபட்சம் மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கிறது. `India Qualifiers -I` 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 -ம் தேதியிலிருந்து ஆரம்பமாகவிருக்கிறது அதற்கான பதிவு ஏற்கானவே ஆரம்பமாகிவிட்டது. புதிய அணிகளுக்கும், Qualifier -I ல் தகுதி பெற முடியாத அணிகளுக்கும் `Indian Qualifiers - II' 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. மேலும், APAC ROG Masters மேடை, அணிகள் தகுதி பெற்று முன்னேறி செல்வதற்கு வசதியாக இன்னொரு வாய்ப்பையும் வழங்குகிறது. India Qualifiers - I, India Qualifiers -II லுமாக வெற்றி பெறும் மொத்தம் 8 அணிகள்
(4 DOTA, 4 CS:GO) பெங்களூர் பிளிட்ஸ் கேமிங் ஜோனில் நடைபெறும் இண்டியா லான் இறுதிப் போட்டியில் விளையாடும். இறுதியாக வெற்றி பெற்ற நான்கு அணிகள் APAC போட்டிக்கான ROA தகுதிச்சுற்றின் இரண்டாவது நிலையில் இந்தியாவுக்காக நேரடியாக பங்குபெறும்.
ROG Masters India Qualifiers - I க்கான பதிவு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. போட்டி 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் தேதி துவங்கும்.
அதிகத் தகவலுக்கு http://drag2death.com/rogmastersindia (log on)
ASUS பற்றி:
ASUS உலக அளவில் மூன்று முன்னணி நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலக அளவில் அதிகமாக விற்கும், அதிகமான விருதுகளைப் பெற்ற மதர்போர்டு தயாரிக்கும் நிறுவனமும் ஆகும். நவீன டிஜிட்டல் காலத்தில், இன்றைய டிஜிட்டல் வீடு, அலுவலகத்துக்கானத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் மதர்போர்டுகள், கிராஃபிக் கார்டுகல், ஆப்டிக்கல் டிரைவ்ஸ், டிஸ்பிளேஸ், அனைத்துமான மேசைக் கணினி, நோட்டுபுக், நெட்புக், செர்வர், மல்ட்டிமீடியா கருவிகள், ஒயர்லெஸ் தீர்வுகள், நெட்வொர்க்கிங் கருவிகள், டேபிளட்ஸ், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றை வடிவமைத்து தயாரித்து வருகிறது. புதுமையால் உந்தப்பட்டு தரத்திற்காக அர்ப்பணித்திருக்கும் ASUS 2013 ஆம் ஆண்டில் 4,256 விருதுகளைப் பெற்றிருக்கிறது. இதனுடைய Eee PC [TM] பெர்சனல் கம்ப்யூட்டர் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமை பெற்றது. உலகளவில் ASUS-ல் 12,500 பணியாளர்களும், உலகத்தரமிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவில் 3,800 பொறியியலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். 2013 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் வருமானம் 14 பில்லியன் டாலர்கள்.
2015 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் மோஸ்ட் அட்மைர்ட் கம்பெனிஸ் பட்டியலில் கணினித் துறை என்கிற பிரிவில் உலகளவில் ASUS ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தது. வேகமாக பரவலாகி வரும் நிறுவனத்தினுடைய தனிப்பட்ட காரணிகளான `புதுமை' , `மக்கள் மேலாண்மை'யில் அதற்கும் மேலே ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது.
ASUS Global ஊடகப் பிரிவு: http://press.asus.com
ASUS India Facebook: https://www.facebook.com/AsusIndia
ASUS India Twitter: https://twitter.com/asusindia
ஊடகத் தொடர்பு
Manoj Kumar
[email protected]
+91-9818520082
Asus India Pvt Ltd
Share this article