டெல்லி, December 11, 2015 /PRNewswire/ --
தெற்காசியாவின் பிரமாண்டமான பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்ச்சியானது, வளர்ந்துவரும் இந்தியாவிற்கான திறன்மிகு பாதுகாப்பை வழங்குகிறது
பாதுகாப்பு தொழில்துறைக்கான உலகின் முன்னணி வருடாந்திர கண்காட்சியான 9வது சர்வதேச தீ மற்றும் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு (IFSEC) இந்தியா எக்ஸ்போ 2015-ஐ, (டிசம்பர் 10 முதல் 12, 2015 வரை), புது டெல்லி பிரகதி மைதானில் UBM India-இன்று அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியை டெல்லி அரசின் மேதகு துணை முதலமைச்சரும், முக்கிய விருந்தினருமான திரு. Manish Sisodia, திரு. Maninderjeet Singh Bitta, தலைவர், All-India Anti-Terrorist Front மற்றும் திரு. Muktesh Chander, சிறப்பு CP (போக்குவரத்து), டெல்லி காவல்துறை ஆகியோர் உள்ளிட்ட, பிரமாண்டமான தொழில்துறை பிரமுகர்களின் முன்னிலையில் தொடங்கி வைத்தார் *.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151210/10136479 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141104/10110098 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் இந்த யுகத்தில், ஸ்மார்ட் நகரங்களின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடு கொடுப்பதற்கு, ஸ்மார்ட் பாதுகாப்பிற்கான தேவை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தீவிரவாத செயல்பாடுகளின் அதிகரிப்பு, உயர்ந்துவரும் குற்றங்களின் விகிதம், தரவு திருட்டுகள், தொலைதூர கண்காணிப்பு, பொது உள்ளகட்டமைப்பின் வளர்ச்சி, அதிகரிக்கும் ஐடி செலவு, அரசு முயற்சிகள் மற்றும் அதிகரிக்கும் பாதுகாப்பு செலவுகள் ஆகியவை, இந்தியாவில் கண்காணிப்பு அமைப்புகளுக்கான சந்தைக்கு ஊக்கத்தை அளித்து வருகின்றன என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். இச்சூழலில், உலகின் முன்னணி பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்வுகள் தொகுதியின் ஒரு பகுதி என்ற முறையில், IFSEC India தனது காட்சியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் போக்குகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது மட்டுமின்றி, தங்கள் தொழில் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான சிறந்த தீர்வுகளைக் கண்டறிவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. CCTV மற்றும் வீடியோ கண்காணிப்பு, பயோமெட்ரிக்ஸ் மற்றும் RFID, ஒருங்கிணைந்த அமைப்புகள், அணுகுதல் கட்டுப்பாடு, சைபர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த அமைப்புகள், பொருள்சார் பாதுகாப்பு, சுற்றுப்புற பாதுகாப்பு, தீ கண்டறியும் அமைப்புகள், குறுக்கீட்டு எச்சரிக்கை ஒலிகள் மற்றும் தீ எச்சரிக்கை ஒலிகள் போனடற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அறிமுகத்தின்போது பேசிய, UBM India-வின் நிர்வாக இயக்குனரான திரு.Yogesh Mudras, கூறியதாவது, "இன்றைய இந்தியச் சூழலில், தொழில்துறை, வர்த்தகம் மற்றும் வீட்டுவசதி அமைப்புகளில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பிற்கு அதிவிரைவான மேம்பாடு அவசியமாகியுள்ளது. 40 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட IFSEC Global-ன் ஒரு பிரிவான, IFSEC India 2015 தொடர்பான UBM India-ன் குறிக்கோள் செலுத்தும் கவனமானது, இத்தேவையை முன்னணிக்குக் கொண்டு வருகின்ற முயற்சியாகும் மற்றும் அதன் விளைவாக, இந்த அமைப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதாகும். இதன் கடந்தகால பதிப்புகளுடைய வெற்றியின் அடிப்படையுடன், இன்றைக்கு உலக பாதுகாப்பு மற்றும் தீ தொழில்துறையின் புகழ்பெற்ற அதிகார அமைப்பாக உள்ள IFSEC India-வின் 2015 பதிப்பானது, தொழில்துறை எதிர்பார்ப்பகளையெல்லாம் கடந்து நிற்கும்." Asian Professional Security Association (APSA), ASIS International, British Security Industry Association (BSIA) மற்றும் Electronic Security Association of India (ESAI) ஆகிய அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன.
20 வேறுபட்ட நாடுகளிலிருந்து, பாதுகாப்பு மற்றும் தீ துறைகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான நிறுவனங்கள் 2015 பதிப்பில் தங்களது பங்கேற்பை உறுதி செய்துள்ளன; மிகவும் முன்னணி கூட்டாளர்களில் சில Aditya, Autocop, Dahua, Enter, Hi-Focus, Hikvision, Lookman, Secureye, Securico, Tech Smart, Uniview மற்றும் Zebronics ஆகும். முன்னணி கூட்டாளர்களில் Acsys, Advik, Avtron, Com-Sur, Godrej Security Solutions, Honeywell, Infinova, Keeper, Messung, Milestone, MR Impex, Nitgen, Ozone, Panasonic, Starex Global மற்றும் Wavesight ஆகியவை அடங்கும்.
IFSEC 2015 "பாதுகாப்பான நகரங்கள்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஓர் ஒரு நாள் மாநாட்டையும், குழுக் கலந்துரையாடல்களையும் நடத்துகிறது. இதன் அமர்வுகள், பேரழிவுகளின்போது நகரங்களை சிறந்த முறையில் தயார்நிலையில் வைப்பதற்கான பாதுகாப்பான தொழில்நுட்பங்கள்: நிகழ் நேரத்தில் அவசரக்கால நடவடிக்கை, IoT உடன், பாதுகாப்புத் தொழில்துறையின் அடித்தள சாத்தியக்கூறை வெளிப்படுத்துதல்: ஒரு முழுமையான நோக்கு, பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் சாதுர்யமான வழிகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை மற்றும் சைபர் குற்ற அமைப்பினைப் புரிந்துகொள்ளுதல் போன்ற தொழில்துறை தலைப்புகளைச் சுற்றி அமைந்திருக்கும்.
IFSEC 2015-ஐ ஒரு தொழில்துறை தளமாக தொழில்துறை ஏற்பதுடன், UBM India வழங்கும் வருடாந்திர கண்காட்சியின் குறிக்கோளையும் எடுத்துரைக்கிறது. (பிற்சேர்க்கை)
திரு. Ashish P Dhakan MD & CEO, PRAMA HIKVISION: "இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் வீடியோ கண்காணிப்புத் தொழில்துறைக்கு இது ஓர் அற்புதமான ஆண்டாகும். CCTV மற்றும் வீடியோ கண்காணிப்பின் முக்கியத்துவம் குறித்த வளர்ந்துவரும் விழிப்புணர்வு, நமது தொழில் வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய அம்சமாக உள்ளது. 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கத் திட்டமிட்டு வரும் "ஸ்மார்ட் சிட்டி மிஷன்" என்ற இந்திய அரசின் புதிய முயற்சியானது, இம்முயற்சி மூலம் இநதியாவை பாதுகாப்பானதாக ஆக்க எங்களுக்கு உதவும்."
Aditya Khemka - CEO, Aditya Infotech: "இந்தியாவில் மற்றும் சர்வதேச அளவில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் தொழில்துறைக்கு 2015 ஓர் இணையற்ற ஆண்டாக இருந்துள்ளது. வாடிக்கையாளர் நடத்தையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்துள்ளன, இதில் மிக முக்கியமானதாக இருந்தது, அனலாக் வடிவங்களுக்கு பதிலாக IP கேமராக்களுக்குள்ள தேவை அதிகரித்திருப்பதற்கு தொலைதூர கண்காணிப்பு மற்றும் வீடியோ அனலிடிக்ஸுக்கான தேவை அதிகரித்திருப்பதே காரணமாகும். தனித் தயாரிப்புகளுக்கு பதிலாக ஆரம்பம் முதல் இறுதி வரையான பாதுகாப்புத் தாவுகளை நாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், அதனால் வன்பொருள் அடிப்படையிலானவைக்கு பதிலாக மென்பொருள் அடிப்படையிலான பாதுகாப்புத் தீர்வுகள் மீது உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதையும் இத்தொழில்துறை கண்டது. இத்தனை ஆண்டுகளில், பாதுகாப்புத் துறையின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றைக் கையாளும் சிறப்பான பணியை IFSEC India செய்வதையும் நாம் காண்கிறோம்.
இது சர்வதேசப் புகழ்பெற்ற ஒரு தளமாகும் மற்றும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாதுகாப்புத் தீர்வுகளில் நம்முடைய மேம்பாடுகளை நாம் எடுத்துக் காட்டுவத்கும் இது நமக்க உதவுகிறது. கூடுதலாக, தேசிய மற்றும் சர்வதேச நோக்குடைய பங்காளர்களுடன் IFSEC நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ள முடிவது நமது விநியோக வலையமைப்புகளை பலப்படுத்துவதற்கும், இதுவரை பயன்படுத்தப்படாத சந்தைகளைச் சென்றடைவதற்கும் நமக்கு உதவுகிறது. மேலும்,இத்தொழில்துறையின் புதிய நிறுவனங்களுடைய ஆர்வம் மற்றும் உற்சாகம் காண்பதற்கு ஊக்கமளிப்பதாக இருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மேலும் சிறப்பை அடைவதற்கான தூண்டுகோலாகவும் அமைகிறது."
Mr. Prasenjeet Bhattacharya - Panasonic India Pvt Ltd-ல், Security & Mobility தொழில் தலைவர்: "மக்கள் தொகை, எல்லைகள் மற்றும் உள்ளகட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, மின்னணுசார் பாதுகாப்பு அமைப்பகளைப் பயன்படுத்துவதற்கு, அதிகரித்துவரும் அறிவுத்திறன் மற்றும் விழிப்புணர்வானது, நகரப் பகுதிகளில் தேவையை அதிகரித்துள்ளது மற்றும் அதிவேக வளர்ச்சி காணும் இறுதிப் பயனர் தொழில்துறையானது, நகரக் கண்காணிப்பாக கணிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில் சகாப்தத்தில் நன்கு அமையப் பெற்றுள்ள இந்தியாவில், IP அமைப்புகள் முக்கியத்துவம் பெற்று, அனலாகிலிருந்து டிஜிட்டலுக்கு மாறிவருவதுடன், டிஜிட்டல் ஐடி வலையமைப்புகள் மற்றும் பொருள்சார் சாதனங்களின் அமைப்பு ஒருங்கிணைப்பானது ஒரு விதிமுறையாகவே ஆகியுள்ளது. அதிக அளவிலான நிறுவனங்களுடன் தங்களின் பாதுகாப்பு நிலைப்பாட்டினை மேம்படுத்தி, டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகளில் தனியார் மற்றும் அரசுத் துறையிலுள்ள மேலும் பல நுகர்வோர் முதலீடு செய்துவரும் நிலையில், ஐடி பாதுகாப்புச் சந்தை முதிர்ச்சியடைந்துள்ளது. IFSEC India போன்ற கண்காட்சிகள், கூட்டாகத் தங்கள் யோசனைகளை வழங்கி, புத்தமைவில் ஈடுபட்டு, தடுப்பு அணுகுமுறையிலிருந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை யுக்திக்கு மாறியுள்ள இந்தியாவின் பாதுகாப்பு அணுகுமுறை போன்ற போக்குகளைக் கவனிப்பதற்கான ஒரு தளத்தை நிறுவனங்களுக்கு வழங்கும் அதே நேரத்தில், தொழில்துறையின் முன்னேற்றம் மற்றும் குறிக்கோளுக்கான தூண்டுதலாகவும் செயல்படுகின்றன. "
Asia Pacific region, Honeywell International India Pvt Ltd-ன் பொது மேலாளர் Atulya Chandra: "இத்தனை ஆண்டுகளில், இந்தியாவின் பயனர் அடித்தளத்தின் ஒட்டுமொத்த தொழில்நுட்பம்சார் புரிந்துணர்வு பல மடங்கு பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. நகர்ப்புற மக்கள்தொகையை அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சிக்கு வழிவகுக்கின்ற, அதிகரித்து வரும் வர்த்தக, வீடுசார்ந்த மற்றும் தொழில்துறை கட்டுமானங்கள், இந்திய மின்னணுசார் பாதுகாப்பு சந்தையை குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்தும் வாய்ப்புள்ளது. குற்றங்கள் மற்றும் திருட்டுகள் அதிகரித்து வருவது மற்றும் மக்களிடையே மின்னணுசார் பாதுகாப்பு சாதனங்களின் நன்மை பற்றிய விழிப்பணர்வு அதிகரித்து வருவது, மின்னணுசார் பாதுகாப்பு சந்தைக்கு முக்கியமாக ஊக்கமளித்துள்ளது. வரவருக்கும் ஆண்டுகளில், தொழில்நுட்ப புத்தமைவுகள் மற்றும் சிறந்த தரமுள்ள தயாரிப்புகள், இந்தியாவில், மின்னணுசார் பாதுகாப்பு தொழில்துறையின் முக்கிய ஊக்கிகளாக அமையும். நிலை II மற்றும் நிலை III நகரங்களில், சில்லறை வர்த்தகம் மற்றும் வீட்டுவசதித் துறையின் விரிவாக்கமானது இவ்வளர்ச்சிக்கு மேலும் தூண்டுகோலாக அமையும்.
விலைக்கு முக்கியத்துவம் தரும் இந்திய நுகர்வோருக்கு, மின்னணுசார் பாதுகாப்பு சாதனங்கள், அனைவராலும் முடிகின்ற விலையில் கிடைக்கச் செய்யப்பட வேண்டுமென்று நம்பப்படுகிறது. அரசு மற்றும் தனியார் துறைகளிலிருந்து மூத்த சேனல் பார்ட்னர்கள் மற்றும் முடிவெடுப்போருடன் பொருள் மற்றும் தீர்வுகள் வழங்குவோரை ஒருங்கிணைப்பதன் மூலம், நமது குறிக்கோள்களை எட்டுவதற்காக, சிந்தனைத் தலைமை, பொருள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் ஆண்டு முழுவதற்குமான வலையமைப்பு ஆகியவற்றை Honeywell Security & Fire-க்கு IFSEC வர்த்தக கண்காட்சி வழங்குகிறது.
இந்திய பாதுகாப்பு சந்தை, மிக அதிக தேவை காரணமாக இதுவரை கண்டிராத முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. சில்லறை வர்த்தகம் மற்றும் நிறுவனப் பிரிவில் வளர்ந்து வரும் விழிப்புணர்வானது, பாதுகாப்புத் தீர்வுகளுக்கு ஒரு பாரம்பரிய அந்தஸ்தைக் கொடுக்கிறது. இந்திய பாதுகாப்பு சந்தையில் ஒருங்கிணைப்பு செயல்முறையின் ஒரு புதிய போக்கு உருவாகியுள்ளது. இந்திய சந்தையிலுள்ள ஒவ்வொரு மண்டலமும், பாதுகாப்புத் தொழில்துறையின் வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது. குறிப்பிட்ட பாதுகாப்புத் தேவைகள் உள்ள ஏராளமான வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மேற்கிந்தியா கொண்டுள்ளது. மேலும் மேற்கிந்தியாவில், கடுமையான உலக அளவிலான பாதுகாப்பு நிர்ணயங்களைப் பின்பற்றும் பல MNC-க்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், வடக்கில் இச்சந்தையானது, இம்மண்டலத்தில் உருவாகிவரும் அரசு, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுடன், அதிகமாக அரசுசார்ந்த முறையில் உள்ளது. 2016-ல், ஏராளமான SEZக்கள் நிறுவப்படும் நிலையில், 3 & 4 நிலை நகரங்களில் மிக அதிக முன்னேற்றத்தை நாம் காண்போம். இம்மண்டலங்கள், குறிப்பாக IT/ITES மற்றும் உற்பத்தித் துறைக்கு பிரத்யேகமாக உள்ள சமீபத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தீர்வுகளுக்கான அதிகரித்த தேவைகளை சுட்டிக்காட்டியுள்ளன. இந்தியாவின் மின்னணுசார் பாதுகாப்பு சாதன சந்தையின் எதிர்காலம், வீடியோ, குறுக்கீடு, வீடியோ அனலிடிக்ஸ், அணுகுதல் கட்டுப்பாடு, தீ போன்றவை உள்ளிட்ட, பல்அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம், ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தீர்வுகளை நோக்கிச் செல்கிறது. அத்தகைய அமைப்புகள், நிறுவனத்திற்கு நடவடிக்கைசார்ந்த அறிவுத்திறன் மற்றும் முடிவெடுப்பதில் ஆதரவு ஆகியவற்றை வழங்கும்."
UBM India பற்றி:
UBM India, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM India, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM Asia-வின் ஒரு நிறுவனமான UBM India, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Plc-க்கு சொந்தமான UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
மிலி லால்வானி
[email protected]
+91-22-61727000
UBM India Pvt. Ltd.
Share this article