புது தில்லி, December 9, 2016 /PRNewswire/ --
UBM India-வினால் நடத்தப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மாநாடு
- 20 நாடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் வளரும் இந்தியாவிற்கான ஸ்மார்ட் செக்கியூரிட்டியை காட்சிப்படுத்தின
- IFSEC India Awards முதன் முறையாக தொடங்கப்பட்டது
- ஹோம்லேண்டு செக்கியூரிட்டியில் கவனம் செலுத்தும் இரண்டு நாள் உயர் தாக்கம் ஏற்படுத்தும் மாநாடு
UBM India இன்று 10-வது சர்வதேச தீ மற்றும் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டினைத் (International Fire & Security Exhibition and Conference (IFSEC) தொடங்கியது. இது 2016, டிசம்பர் 8 முதல் 10-வரை புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. IFSEC 2016 மாநாடு தலைமை விருந்தினரான இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் Shri Hansraj Gangaram Ahir அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது; இதில் சத்தீஷ்கர் மாநில உள்துறை அமைச்சர் Shri Ramsewak Paikra, மற்றும் பிற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். Shri D. R. Kaarthikeyan, IPS (ஓய்வு.), தலைவர், ASSOCHAM " National Council of Homeland Security "; Mr.Maninderjeet Singh Bitta, தலைவர், "All-India Anti-Terrorist Front"; Mr.Shiv Charan Yadav, தலைவர், APSA; டாக்டர். Arvind Gupta, இந்திய அரசின் டெபுட்டி நேஷனல் செக்கியூரிட்டி அட்வைசர்; Shri Anil Dhawan, துணைத் தலைவர், ASSOCHAM National Council of Homeland Security; Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM India மற்றும் Pankaj Jain, குழு இயக்குனர், UBM India ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்களாகும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161208/447012 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161208/447013 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20161208/447014 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141104/10110098 )
இந்தக் கண்காட்சியானது பன்னாட்டளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோர் ஒன்று கூடி பாதுகாப்பு மற்றும் தீ சார்ந்த விஷயங்களில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பற்றிப் பேசவும் இதில் உள்ள மிகக் கடுமையான சவால்களில் சிலவற்றுக்கான தீர்வுகளைத் தேட ஒரு பொதுத் தளமாக அமைந்துள்ளது.
பன்னாட்டளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோர் ஒன்று கூடுவதற்கான ஒரு தளமாக அமைந்ததோடு, வருகையாளர்களுக்கு தகவல் அளிக்கும் செயல் விளங்கங்களையும் வாய்ப்புகள் பலவற்றையும் அளித்து அவர்கள் நுண்ணிய தொழில்நுட்பங்களைப் பற்றியும், துறையின் போக்குகளையும், சவால்களையும், சந்தையின் நுன்னறிவுகளையும் கற்கவும் தங்கள் தொழிலையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த தீர்வுகளைக் கண்டறியவும் வாய்ப்பு வளங்களை அளித்துள்ளது.
IFSEC India 10-வது வருடாந்திர மாநாட்டில் ஆஸ்திரேலியா, சீனா, ஹங்கேரி, இந்தியா, கொரியா, மலேசியா, ரசியா, சிங்கப்பூர், ஸ்வீடன், தாய்வான், யூஏஈ, யூகே மற்றும் யூஎஸ்ஏ போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். APSA, ESAI மற்றும் ESSCI போன்ற சங்கங்களினால் அதன் பெருமுயற்சிகள் பெருமளவில் ஆதரிக்கப்படுகிறது.
இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்றனர். இதில், Aditya Infotech, Advik, Dahua, ERD Technologies, ESSL, HI-Focus, Hikvision, HANWHA TECHWIN (முன்னால் SAMSUNG TECHWIN), Secureye, Fortune Marketing, Tech smart, Tenda, Hamsa, Uniview, ZKTeco போன்ற பிரிமியர் பிளஸ் பார்ட்னர்களும் அடங்குவர். இந்த கண்காட்சிக்கு UBM India-வின் பிரிமியர் பார்ட்னர்களுள் ACSYS, Axestrack, Face ID, Honeywell, Lilin, Mantra, Panasonic, Road point, Sparsh, Starex, Unicam systems, Unique Electrovision மற்றும் Zebronics அடங்குவர்
10-வது IFSEC India எக்ஸ்போவின் தொடக்க நிகழ்ச்சியில் UBM India-வின் நிர்வாக இக்குனரான
Mr. Yogesh Mudras பேசும்போது, "இன்று, உலகம் முழுவதும் உள்ள நகரங்கள் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து விரைவாக வளர்ந்துகொண்டிருக்கின்றன" என்றார். அவை அதிக நெருக்கடிமிக்கதாக ஆகிவிட்டன. குற்றச் செயல்களும் பெருகி விட்டன. இதனால் பொதுச் சொத்துகள் சேதமடைகின்றன. பிரச்சனைகளை சிக்கலாக்கும் வகையில், தீவிரவாதம் மிகப்பெரிய கவலையாகிவிட்டது. இது சமூகங்களுக்கும் சுற்றத்தினருக்கும் புதிய பாதுகாப்புப் பிரச்சனைகளைக் கொடுக்கிறது. இந்தச் சூழல்களில், தொழில்துறையினர் இணைந்து கருத்துக்களை உருவாக்கி, புத்தாக்கம் செய்து விலை குறைந்த அதே நேரம் எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடிய உயர் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த தீர்வுகள் போன்ற புதிய பாணிகளைக் கண்டறிவதற்கான தளத்தை நாம் அளிப்பதன் மூலம் IFSEC India-வானது இத்துறையின் வளர்ச்சிக்கும் நோக்கத்திற்கும் வினையூக்கியாகச் செயல்படும்.'’
'"இந்த ஆண்டு, நாம் ஒரு முக்கியமான மைல் கல்லை எட்டியிருக்கிறோம். IFSEC-ன் 10-வது ஆண்டுவிழாவில் புதிய உந்துதலை நாம் பெற்றிருக்கிறோம். தன்னுடைய 10-வது கண்காட்சியில் சர்வெய்லன்ஸ் மட்டுமல்லாது, இறுதிப் பயனர்கள் மற்றும் வழங்குபவர்கள் அறிந்து கொள்வதற்காக பயோமெட்ரிக்ஸ், டிரான்ஸ்போர்ட், அக்சஸ் கண்ட்ரோல் சார்ந்த தொழில்நுட்பங்களையும் IFSEC காட்சிப்படுத்துவதில் பெருமைகொள்கிறது பன்னாட்டுப் பங்கேற்பு, தொழில்துறை தலைவர்களின் ஈடுபாடு, முன்னணி சர்வதேச பிராண்டுகள் தங்கள் தீர்வுகளை காட்சிப்படுத்தியது, கருத்தாழமிக்க மாநாட்டு உரைகள் போன்றவை இந்த கண்காட்சியின் மதிப்பை பெரும் உச்சத்தை எட்டச் செய்திருக்கிறது". என்று மேலும் கூறினார்.
இந்தியாவில் ஹோம்லேண்டு செக்கியூரிட்டியின்மீது அதிகரித்துவரும் கவனத்தோடு IFSEC India-வானது, 'வெளிப்புற மற்றும் உட்புற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பாதுகாவல் உக்திகள்' மற்றும் 'அதிநவீன பாதுகாவல் தொழில்நுட்பத்துடன் விவேகமான மற்றும் பாதுகாப்பான உலகை உருவாக்குதல்' என்ற தலைப்புகளில் இரண்டு நாள் மாநாட்டையும் இந்தக் கண்காட்சியோடு நடத்த இருக்கிறது. இதன் மூலம் உலகளாவிய பாதுகாப்புச் சந்தையில் பெற்றுள்ள தொடர்புடைய கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறது. முதல் நாளில் பாதுகாப்பு சாதனங்களை வாங்குவது; மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கருவிகள், IED-கள்; தடயவியல் அறிவியல் பயிற்சி மற்றும் மேம்பாடு; விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் UAV/டிரோன்ஸ் பாலிசி ஆகியவை பற்றி தொழில்நுட்ப அமர்வுகள் உள்ளன. 2-ஆம் நாளில் எல்லை மேலாண்மை யுத்தி, இடதுசாரி தீவிரவாதத்தின் சவால்கள் மற்றும் தேசிய பாதுகாப்பில் அதன் தாக்கம்; பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு; செக்கியூரிங் டிஜிட்டல் நெட்வொர்க் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் இருக்கும். Assocham & PWC ஆகியவை முறையே 'கான்ஃபரன்ஸ்' மற்றும் 'நாலெட்ஜ் பார்ட்னர்களாக' இந்த கண்காட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
IFSEC India-வானது, தன்னுடைய முதலாவது IFSEC India விருதுகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரானிக் செக்கியூரிட்டி இன்டஸ்ட்ரி பெருகிவருகிறது. பல்வேறு தொழில்துறையில் மின்னணுப் பாதுகாப்புக்குப் பின்னால் உள்ளவர்களை அனைவருக்கும் வெளிக்காட்டும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆற்றல்மிக்க பாதுகாப்பை உறுதிப்படுத்த திரைமறைவில் தொடர்ந்து பணியாற்றும் CSOs மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தனிச்சிறப்பையும் புதுமைகளையும் விருதுகள் கௌரவப்படுத்தும். (இது டிசம்பர் 08 அன்று நடந்தது). IFSEC India விருதுகளின் பிராசஸ் அட்வைசராக Ernst & Young உள்ளது. இதை ASSOCHAM ஆதரிக்கிறது. விருதுகளை வழங்கும் பார்ட்னர்களாக Dahua Technology மற்றும் HIK Vision இருந்தது.
The Associated Chambers of Commerce and Industry of India (Assocham)-வின் தொழில்துறை அறிக்கையின்படி, பிரிட்டன், ஜெர்மணி மற்றும் ஃபிரான்ஸோடு இணைந்து இந்தியாவும் 2020-ல் உலகளாவிய ஹோம்லேண்டு செக்கியூரிட்டி (HLS) சந்தையில் மிக முக்கிய நாடுகளுள் ஒன்றாக வளரவுள்ளது. IFSEC-ன் முக்கிய வாய்ப்புகளாவன
IFSEC India 2016-ன் முக்கிய வாய்ப்புகள் நகர கண்காணிப்பு, முக்கிய உட்கட்டுமான பாதுகாப்பு, எல்லை, துறைமுகம் மற்றும் விமானப் பாதுகாப்பு, போக்குவரத்துப் பாதுகாப்பு, தீ பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, ஹோம் ஆட்டோமேஷன், பாதுகாப்பான நகரங்கள் மற்றும் பிற பிரிவுகளில் உள்ளன.
இன்டஸ்ட்ரி ஸ்பீக்:
Prama Hikvision India
Mr. Ashish P. Dhakan மேலாண்மை இயக்குநர் மற்றும் சிஈஓ Prama Hikvision India Pvt. Ltd. பேசும்போது, "இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கான வாய்ப்பு உகந்ததாகவும் இன்பகரமானதாகவும் இருக்கும். இந்தியாவில் உள்ள எல்லா பெரிய துறைகளும் பாதுகாப்புப் போர்வையைக்கொண்டே விரிவடைகின்றன. 'டிஜிட்டல் இந்தியா', 'மேக் இன் இந்தியா', 'நகர கண்காணிப்பு', 'ஸ்மார்ட் சிடீஸ்' மற்றும் 'Demonetization' போன்ற பிரதமர் Modi அரசின் முக்கிய முன்முயற்சிகள் இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கான வாய்ப்பு வளங்களை அகலத் திறந்து விட்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்புச் சந்தை ஆண்டுக்கு ரூ. 6800 கோடி அளவுக்கு அதாவது 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உள்ளது. இந்த ஆண்டில் இதன் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பயங்கரவாத அதிகரிப்பு, குற்றங்களின் அதிகரிப்பு, வளரும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கருவிகளின் விலை வீழ்ச்சி போன்றவை இந்தியாவில் பாதுகாப்புத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உள்ளன. உலக அளவில் பயங்கரவாத அதிகரிப்பினால் எல்லாரும் எல்லா நிறுவனங்களும் அதிக அளவில் பாதுகாப்பு உணர்வுடன் இருக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில், மக்களையும் பொதுச் சொந்தங்களின் இழப்பையும் சேதங்களையும் தடுக்க, பொது இடங்களில்கூட அதிக அளவு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்படுகின்றன. உண்மையில், உலக அளவில் பாதுகாப்புக்கான செலவுகள் உயர்ந்துகொண்டே வருகின்றன. யாரும் அஜாக்கிரதையாக இருக்க விரும்புவதில்லை."
"IFSEC India 2016 கண்காட்சியானது CCTV மற்றும் வீடியோ சர்வெய்லன்ஸ், பயோமெட்ரிக்ஸ் மற்றும் RFID, இன்டகிரேட்டட் சிஸ்டம்ஸ், அக்சஸ் கண்ட்ரோல், சைபர் செக்கியூரிட்டி, பிசிக்கல் செக்கியூரிட்டி, பெரிமீட்டர் புரொட்டெக்ஷன், ஃபயர் டிடெக்ஷன் சிஸ்டம்ஸ், இன்ட்ரூடர் அலார்ம்ஸ் மற்றும் ஃபயர் அலர்ம்ஸ் போன்ற அதி நுட்பமான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது. IFSEC India 2016 கண்காட்சியானது உலக பாதுகாப்புச் சந்தையில் தன்னுடைய இடத்தை உறுதி செய்கிறது, என்று மேலும் அவர் கூறினார்.
Honeywell Security & Fire India
Honeywell Security & Fire India-வின் பொது மேலாளரான Mr. Sharad Yadav, பேசும்போது,
"Honeywell இந்தியாவில் என்பது ஆண்டுகளாக பலமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புத் தேவைகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறது. அரசின் ''மேக் இன் இந்தியா' என்ற முன்முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களுக்காக உள்ளூரிலேயே தயாரிக்கிறோம். IFSEC-ல், Honeywell தன்னுடைய 'ஒருங்கிணைந்த பாதுகாவல் & தீயணைப்பு தீர்வுகள்' போர்ட்ஃபோலியோவை காட்சிப்படுத்த இருக்கிறது. வீடியோ சர்வெய்லன்ஸ், வளாகங்களைப் பாதுகாக்க அக்சஸ் கண்ட்ரோல், தீயைக் கண்டறிவதற்காக ஃபயர் அலார்ம் சிஸ்டம்ஸ் மற்றும் அத்துமீறி நுழைபவர்களைக் கண்காணிக்க பர்க்லர் அலார்ம்கள் உட்பட்ட ஒரு அனைத்தையும் ஒருங்கிணைத்த தயாரிப்புகளையும் தீர்வுகளையும் இதில் காட்சிப்படுத்துகிறோம். இந்தியாவில் உள்ள உள்ளூர் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு மற்றும் தீ தேவைகளுக்கு உதவ Honeywell தயார் நிலையில் உள்ளது. எல்லா சந்தைப் பிரிவுகளுக்கும் அது தொழில்நிறுவனம், SMB, வங்கி, விருந்தினர் இடங்கள், சில்லறை வணிகம், தங்கும் வசதிகள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற எல்லா துறைகளிலும் உள்ள பாதுகாப்புத் தேவைகளுக்கும் உதவத் தயாராக உள்ளது'’
இந்த ஆண்டு Honeywell தன்னுடைய புதிய தயாரிப்புகளுள், eVance™ Facility Manager-ஐ காட்சிப்படுத்தும். இது ஒரு கிளவுட் பேஸ்டு தொழில்நுட்பமாகும். ஃபயர் சிஸ்டங்களின் நலனை சிறப்பாகக் கண்காணிக்கவும் சிறந்த முறையில் முடிவெடுக்கவும் இது உதவும். MaxPro™ Cloud Alarm Monitor, என்ற கிளவுட் அடிப்படையிலான பிளாட்ஃபார்மாகும். இது, சக்திவாய்ந்த ரிமோட் மானிட்டரிங்காகவும் பல தளங்களை ஒருங்கிணைக்கும் ரியல் டைம் ரெஸ்பான்ஸாகவும் இருக்கும். eQUIP™ கேமரா சீரீஸ் என்ற உயர் தர படமெடுக்கும் கேமராக்கள் பல்வேறு ஒளிச் சூழலிலும் வானிலைச் சூழலிலும் பயன்படக்கூடியவை. இவற்றை பல இடங்களில் பயன்படுத்த முடியும். Xtralis என்பது தீ மற்றும் அத்துமீறி நுழையும் அபாயங்களை தொலைவிலிருந்து கண்டறிந்து உறுதிப்படுத்தவும் உதவும், மேம்பட்ட பெரிமீட்டர் செக்கியூரிட்டி தொழில்நுட்பங்கள், மற்றும் வீடியோ அனலிடிக்ஸ் மென்பொருள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
91-9833279461
UBM India
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Share this article