காந்திநகர், இந்தியா, November 2, 2015 /PRNewswire/ --
குஜராத் மாநில நர்மதா மாவட்டத்தில் திருவுருவச் சிலையின் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ள மேம்பாட்டிற்கான ஒரு முயற்சியாக, பொது நிதி வழங்கலுக்கும், சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றலுக்கும் வகை செய்யும் இந்தியாவின் முதல் பொதுவியல் கூட்ட நிதி திரட்டும் தளமான ஃபண்ட் ஃபார் யூனிட்டி, அக்டோபர் 31, 2015 அன்று, இந்திய நேரம் இரவு 7.30 மணிக்கு பொதுமக்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட சர்வதேசப் பார்வையாளர்களுடனான ஒரு கூகிள் கூட்ட அமர்வைத் தொடர்ந்து, இத்தளம் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151030/772257 )
ஃபண்ட் ஃபார் யூனிட்டி என்பது, ஒற்றுமைச் சிலை திட்டம் எனும் குடையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு டிஜிட்டல் முயற்சியாகும், மேலும் இது குஜராத்தின் பின்தங்கிய பகுதிகளில் சமூக மற்றும் பொருள்சார் உள்கட்டமைப்பையும், அதைத் தொடர்ந்து HDI-யையும் மேம்படுத்துவதற்காக, தனிநபர் பொது மற்றும் தனியாரின் நன்கொடைசார் நிதியைக் கோருகிறது. இத்தளம் பெரிதும் பரிமாற்ற அடிப்படையிலானது மற்றும் இது ஒரு முழுமையான செயல்பாட்டிலுள்ள இணையவழி சொத்தாகும், மேலும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி திரட்டும் இயக்கங்களை இதனால் நடத்த முடியும். இது பாதுகாப்பான, சமூகரீதியாக இணைக்கப்பட்ட, ஆரம்பத்திலிருந்து முடிவு வரையிலான பயனர் அனுபவத்தை வழங்குவதால், பங்களிக்க உள்ளோரால் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களை பிரவுஸ் செயது, அவை ஒவ்வொன்றின் மதிப்பு ஆய்வுகளைப் புரிந்து கொண்டு, ஒரு பாதுகாப்பான ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் வாயில் மூலம் தாங்கள் விரும்பும் திட்டங்களுக்கு, இந்திய கரன்சியில் நிதி உதவி வழங்க முடியும். இத்தளத்தில் வழங்கப்படும் பங்களிப்புகள் 50% அளவிற்கு, இந்திய வருமான வரி சட்டப் பிரிவு 80(G)ன் கீழ் வரிவிலக்குப் பெற தகுதி பெறுகின்றன.
ஃபண்ட் ஃபார் யூனிட்டி-ல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்துமே குஜராத் அரசினால் தொடங்கப்பட்டு, அது அங்கீகாரம் அளித்துள்ள அமைப்புகளால் நிர்வகிக்கப்படுபவையாகும். இத்தளத்தின் மூலம், அனைத்து வகையான மக்களும் தாங்கள் தகுதிபெறுவதாகக் கருதுகின்ற திட்டங்களுக்கு நிதி வழங்கலாம், மேலும் தாங்கள் வாழ்கின்ற மற்றும் அக்கறை காட்டுகின்ற சமுதாயங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, அரசுடன் சேர்ந்து செயலாற்றலாம்.
ஃபண்ட் ஃபார் யூனிட்டியில் பதிவு செய்தவுடன், தங்கள் தனிப்பட்ட டேஷ்போர்டுகளில் தாங்கள் ஆதரவளித்துள்ள திட்டங்களின் செயலாக்கம், செயல்திறன் மற்றும் அது சென்றடையும் முறை ஆகியவை பற்றிய புள்ளியியல் தகவல்களை பயனர்களை பார்த்துக் கொள்ளலாம். அனைத்துத் திட்டங்களுமே அமலாக்கம் குறித்த தொடர்ச்சியான புதுப்பில்களைக் கொண்டிருப்பதன் மூலம், பங்களிப்போருக்கு தங்களது முழு பொறுப்பேற்றலையும் உறுதி செய்கின்றன.
ஃபண்ட் ஃபார் யூனிட்டியை http://www.fundforunity.in -ல் அணுகலாம்.
ஒற்றுமைச் சிலையைப் பற்றி:
ஒற்றுமைச் சிலை என்பது, இந்தியக் குடியரசின் உருவாக்கத் தந்தைகளில் ஒருவரான முன்னோக்குப் பார்வை கொண்ட தலைவர் வல்லபாய் பட்டேல் அவர்களின் 182 மீட்டர் உயர திருவுருவச் சிலையாகும் - இது தற்போது இந்தியாவில், குஜராத் மாநிலத்திலுள்ள நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்தார் சரோவர் அணையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பற்றிய மேலும் தகவல்களை http://www.statueofunity.in and http://www.facebook.com/sou.official என்ற வலைத் தளத்தில் காணலாம்.
ஊடகத் தொடர்பு:
திரு. K. ஸ்ரீநிவாஸ்
[email protected]
079-23252735
Share this article