மும்பை, October 21, 2015 /PRNewswire/ --
- அதிகரிக்கப்பட்ட சர்வதேச பங்கேற்பு
- 300 நிறுவனங்கள், 500 பிராண்டுகள் மற்றும் 20,000 பார்வையாளர்களுக்கும் மேலாக
இந்தியாவின் முன்னணி சர்வதேச உட்புறவடிவமைப்புகள், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சியின், யுபிஎம் வழங்கும் இண்டெக்ஸ் உடைய 27ஆம் நிகழ்வு (15-18 அக்டோபர்) மும்பையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. உட்புற வடிவமைப்பின் ரசிகர் - ஜரீன் கான் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட கண்காட்சி, துருக்கி, யூகே, சீனா, இத்தாலி, மலேசியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சர்வதேச பங்கேற்பை கண்டது. நாடு முழுவதிலும் இருந்து முன்னணி கட்டிடக்கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு வாங்குநர் பிரதிநிதிகள், கட்டிடம் கட்டுகிறவர்கள் & மேம்பாட்டாளர்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டனர்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151008/10132188)
கல்வி மன்றங்கள், புதுமை முனைகள் மற்றும் தயாரிப்பு வெளியீட்டு மண்டலங்கள் ஆகியவற்றால் இந்த கண்காட்சி குறியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டீரியர் டிசைனர்ஸ் (ஐஐஐடி), அனைத்து இந்திய வன்பொருள் கழகம், விருந்தோம்பல் கொள்முதல் மேலாளர்கள் மன்றம் (ஹெச்பிஎம்எஃப்), தாய்வான் ஃபர்னீச்சர் உற்பத்தியாளர்கள் கழகம் (டிஎஃப்எம்ஏ), துருக்கியில் இருந்து ஃபர்னீச்சர் கழகம் (எம்ஏஆர்எம்ஓபி), இஸ்தான்புல் ஏற்றுமதியாளர் கழகம் (ஐஈஏ) மற்றும் பிரிடிஷ் ஒப்பந்த ஃபர்னிஷிங் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.
பி2பி வணிக கண்காட்சியானது மூத்த கட்டிடக்கலைஞர்கள், உட்புற வடிவமைப்பாளர்கள் மற்றும் பிரிண்டா மில்லர், ஏஆர்.கரன் குரோவர், பிரதாப் ஜாதவ், தலைவர், ஐஐஐடி மற்றும் மோகன் தேஷ்பாண்டே தலைவர், விருந்தோம்பல் கொள்முதல் மேலாளர்கள் மன்றம் போன்ற சிறந்த தொழில்சார் பிரமுகர்களின் முன்னிலையை பெற்றது. கலை உறைவிடமானது யூகே, ஆஸ்திரேலியா மற்றும் நேபாலில் இருந்து வேலைப்பாடுகளை காட்சிப்படுத்தியது. வடிவமைப்பாளர்கள் - கனிகா பாவா, லேகா வாஷிங்டன், ரூபில் நகி, ஏஆர்.சுமேஷ் மேனன் ஆகியோரின் நுண் கலை, சிற்பங்கள் மற்றும் புகைப்பட வடிவமைப்பு புலவார்டு. குடோஸ் கேலரி ஆஷிஷ் ஷா, ரேஜா காபுல், ஆலன் ஏப்ரஹாம் என்கிற சில பெயர் குறிபிடப்பட்டுள்ளோரை போன்ற 12 சிறந்த கட்டிடக் கலைஞர்களின் வேலைகள் காட்சிப்படுத்தப்பட்டன. சமையல்கலை நிபுணர் ரன்வீர் பிரார் கிட்சன் கேட்டலாகை வெளியிட்டார்.
யோகேஷ் முத்ராஸ், செயல்பாட்டிலுள்ள மேலாண்மை இயக்குநர், யூபிஎம் இந்தியா, இவ்வாறு கூறினார், "யூபிஎம் உடைய சந்தை ஊடுருவலோடு, எதிர்பார்க்கப்பட்டபடி, இன்டெக்ஸ் தனது தேசிய அரங்குகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாங்குநர்கள் மற்றும் சர்வதேச வளங்கள் (Sourcing) பிரதிநிதிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. எங்கள் கண்காட்சியாளர்களிடம் இருந்து இதையே பிரதிபலிக்கின்ற அதிகப்படியான பதிலை பெற்றுள்ளோம். 27வது நிகழ்வும் இதன் மூலம் துறையின் மகத்தான ஆற்றலை வழிநடத்துவதற்கான தொழில்துறை தளமாக தொடர்ந்து சேவைசெய்துள்ளது."
யூபிஎம் இந்தியா பற்றி
யூபிஎம் இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. யூபிஎம் இந்தியா ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு யூபிஎம் ஆசியா நிறுவனமான, யூபிஎம் இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. யூபிஎம் ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள யூபிஎம் பிஎல்சிக்கு சொந்தமானது. யூபிஎம் ஆசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்பு
பிரியா பாட்ஷா
[email protected]
+91-22-61727000
யூபிஎம் இந்தியா
Share this article