மும்பை, October 19, 2015 /PRNewswire/ --
அணுசக்தி சேதாரத்திற்கான பொதுவியல் பொறுப்பேற்பு (CLND) சட்டம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை 'தவறானவை' மற்றும் 'அவசியமற்றவை' என்று இன்று தெரிவித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அந்தச் சட்டம் உண்மையிலேயே நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுள்ளது என்று கூறினார்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151007/10132073 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
"CLND குறித்து எழுப்பப்பட்ட கவலைகள் தவறானவை மற்றும் அவசியமற்றவை என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, நாட்டின் நலனுக்கும் நன்மை விளைவிக்கக்கூடியது மற்றும் யாரும் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை," என்று MoS PMO-ஆன சிங், இங்கு நடைபெற்ற இந்திய அணுசக்தி உச்சி மாநாட்டில் கூறினார்.
ஆபரேட்டருக்கு வழிவகைக்கான உரிமையை கொடுத்து, ஏதேனும் விபத்து ஏற்படும் நிகழ்வில், விநியோகிப்பாளர்கள் மீது அது வழக்குத் தொடுக்க அனுமதிக்கும் CLND சட்டத்தின் (2010) ஷரத்துகள், அணுசக்தி தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தடையாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இக்கவலைகளைக் கையாள்வதற்காக, அயல்நாட்டு அணுசக்தி விநியோகிப்பாளர்களின் நிதிச் சுமையை ஈடுசெய்வதற்கு உதவும் பொருட்டு, ரூ.1,500 கோடி அளவிற்கு ஒரு காப்பீட்டு தொகுதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இது CLND-ன் கீழ் கட்டாயமானது என்று அவர் கூறினார்.
" அணுசக்தி ஒரு காப்பீட்டு தொகுதியின் மூலம் அரசு மேற்கொண்டுள்ள தொடர் கண்காணிப்பானது ஆபரேட்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது. இச்செயல்முறை மூலம் அவர்களுடைய கவலைகள் கையாளப்படுகின்றன.
"எனவே, அது அயல்நாட்டு அணுசக்தி விநியோகிப்பாளர்களின் நலன் மட்டுமின்றி, நமது நலன் மற்றும் பாதுகாப்புக் கருதியும் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அயலநாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்களின் கவலைகள் மீது அரசு போதிய அளவிற்குக் கவனம் செலுத்தவில்லை என்று கூறும் எவருக்கும் (ஆபரேட்டர்கள்) இது ஒரு நல்ல உறுதியளிப்பாக அமையும்," என்று அவர் கூறினார்.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re) மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுத்துறையிலிருந்து நியூ இந்தியா, ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆயுள்-சாரா காப்பீட்டு நிறுவங்களால் அமைக்கப்பட்டுள்ள ரூ. 1,500 கோடி தொகுதியின் கீழ் வழங்கப்படும் பாலிசிக்கள், அணுசக்தி ஆபரேட்டர்களுக்கான பொறுப்பு காப்பீட்டு பாலிசியாகவும், அணுசக்தி விநியோகிப்பாளர்களின் சிறப்பு அவசரநிலை (வழிவகைக்கான உரிமைக்கு எதிரான) காப்பீட்டு பாலிசியாகவும் இருக்கும்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்பு
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22-61727000
PR - தலைவர்
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article