டெல்லி, September 24, 2015 /PRNewswire/ --
- UBM இந்தியா நடத்தும் ஆசியாவின் மிகப் பெரிய தொழில்துறைக் கூட்டம்
- 550-க்கும் அதிகமான காட்சியாளர்கள், 35 நாடுகள் மற்றும் 6 தேசிய அரங்குகள்
- இந்திய மற்றும் உலக பிராண்டுகளுடன், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்கேற்பு
இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி கண்காட்சி (REI)-ன் 9[வது] பதிப்பை UBM இந்தியா கிரேட்டர் நொய்டாவிலுள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் (செப்டம்பர் 23 முதல் 25 வரை நடைபெறுவது) இன்று தொடங்கி வைத்தது. REI, தொழில்துறையின் போக்குகள், சவால்கள் மற்றும் இந்திய ஒழுங்கமைப்பு கட்டமைப்பு உள்ளிட்ட சந்தை குறித்த கணிப்புகளை கலந்தாலோசிப்பதற்காக, அயல்நாட்டு பங்கேற்பாளர்கள் உட்பட, இந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயம் ஒன்றுகூடுகின்ற ஓர் உலகளாவிய தளமாகும். இந்நிகழ்ச்சி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலவளங்களின் பயன்பாடுகளை மேம்படுத்தி, அவற்றைப் பொதுப் போக்கிற்குக் கொண்டுவருதல், புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துதல், தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டுத் தளத்தின் வாயிலாக கலந்தாலோசனைகளுக்கு மேலும் வளமூட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150923/10131174-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150923/10131174-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141027/10109418 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
திரு. மைக்கேல் டக், செயலதிகார துணைத் தலைவர், UBM ஆசியா; திரு. யோகேஷ் முத்ராஸ், UBM இந்தியா பிரைவேட் லிமிடெடின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனர் மற்றும் ரஜ்னீஷ் கத்தார், குழு இயக்குனர், UBM இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் தொடங்கி வைத்த இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி கண்காட்சி 2015-ன் தொடக்க விழாவானது, சிறப்பு விருந்தினர், திரு. உபேந்திர திரிபாதி, செயலர், புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம், இந்திய அரசு, அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. திரு. காமேஸ்வர ராவ், எரிசக்தி, நுகர்பயன்கள், மற்றும் சுரங்கப்பணி தலைவர், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், நிகழ்ச்சியின் கருப்பொருளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, திரு. முனேஹிகோ சூச்சியா, செயலதிகார இயக்குனர், NEDO, ஜப்பான், திரு. தில்லான் பானர்ஜி, வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர், அமெரிக்க தூதரகம், புது டெல்லி, டாக்டர். மார்டின் ஹன்ஸ், தூதின் துணைத் தலைவர், பொருளாதார மற்றும் உலக விவகாரங்கள் துறைத் தலைவர், இந்தியாவிலுள்ள ஜெர்மானிய கூட்டாட்சிக் குடியரசின் தூதரகம், மற்றும் மேன்மை தங்கிய மிஸ் ஆமி ஆடம்ஸ், நியூ ஜிலாந்து நீதித் துறை, நீதிமன்றங்கள், தகவல்தொடர்பு மற்றம் ஒலிபரப்புத் துறை அமைச்சர், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் - இந்திய அரசு (MNRE), இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA), ஆந்திர பிரதேச புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் (NREDCAP), காற்று எரிசக்திக்கான தேசிய நிறுவனம் (NIWE), இந்தோ-ஜெர்மானிய எரிசக்தி குழு உதவி அலுவலகம் (IGEF), தமிழ்நாடு சூரிய எரிசக்தி மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு (TNSEDA), சூரிய எரிசக்தி மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய உயிரிவாயு கூட்டமைப்பு ஆகியவை இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன.
REI இந்தியா 2015, சீனா, ஜப்பான், இத்தாலி, தைவான், கனடா மற்றும் யூஎஸ்ஏவிலிருந்து நாட்டு அரங்குகளைக் கொண்டிருந்தது மற்றும் நியூ ஜிலாந்தின் நீதித்துறை, நீதிமன்றங்கள், தகவல் தொடர்புகள் மற்றும் ஒலிபரப்பு அமைச்சரான மேன்மை தங்கிய மிஸ். ஆமி ஆடம்ஸ் வழிநடத்தும் தொழில் நிறுவனங்களுக்கான ஒரு பிரதிநிதிக் குழுவுடன், நியூ ஜிலாந்து இந்திய சந்தைக்குள் பிரவேசிக்கிறது.
உற்பத்தியாளர்கள், EPC-க்கள் மற்றும் சேவை வழங்குனர்களை ஒன்று சேர்த்துள்ள REI 2015 வர்த்தகக் கண்காட்சியில், பெர்கன் அசோசியேட்ஸ், பாஷ் சோலார் எனர்ஜி, பான்ஃபிக்லியோலி ரின்யூவபிள் பவர், கன்வர்ஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட், கனடியன் சோலார், டெல்டா பவர் சொல்யூஷன் (I) பிரைவேட் லிமிடெட், EMMVEE ஃபோட்டோவோல்டெய்க் பவர் பிரைவேட் லிமிடெட், எனர்பார்க் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், GE, ஜீனஸ் இன்னொவேஷன் லிமிடெட், ஹர்ஷா அபாகஸ் சோலார், ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜீஸ், மஹிந்திரா சஸ்டேன், நியூவோசால் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், ஃபோகாஸ் இந்தியா சோலார் பிரைவேட் லிமிடெட், ரிஜன் பவர்டெக் பிரைவேட் லிமிடெட், ரோல்டா பவர் பிரைவேட் லிமிடெட், ஸீமென்ஸ் லிமிடெட், ஸ்கைபவர் குளோபல், ஸ்டெர்லிங் வில்சன், சன் எடிசன் சோலார் பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், சுஸ்லான், விக்ரம் சோலார் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உட்பட 550-க்கும் மேற்பட்ட மேலும் பல பங்கேற்கும் காட்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சி, புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்துவதற்கான அறிமுகத் தளமாகவும் அமையும். இந்திய காற்றுப் பயன்பாடுகளுக்கான A 1 MW-ஐ டெல்டா பவரும், தங்கள் சோலார் PV மாட்யூல்களின் சஃபையர் வகைகளை நவிடாஸ் கிரீன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அறிமுகப்படுத்தினர், அதே நேரத்தில் 60 செல்களில் 260 வாட் மாட்யூலுடன் உயர் ஆற்றல் 4 பஸ் பார் செல்லை PV பவர் டெக் அறிமுகப்படுத்தும்.
இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களில், ஜப்பான் அரங்கில் ஹைட்ரஜன் எரிபொருளுடனான கான்செப்ட் காருடன் ஒரு நேரடி செயல்விளக்கம், குளோபல் சஸ்டெயினபிள் எனர்ஜி சொல்யூஷன்ஸ் (GSES) நடத்திய பயிலரங்கம், நியூ ஜிலாந்து க்ளீன்டெக் அன்ட் ரின்யூவபிள் எனர்ஜி ரவுண்ட்டேபிள், வேர்லட் ஆஃப் இன்னொவேஷன் என்ற அறிமுகத் தள அரங்கு ஆகியவை அடங்கும். அடுத்த இரண்டு நாட்களில், காற்று எரிசக்திக்கான தேசிய அமைப்பு (NIWE) நடத்திய தொழில்நுட்பக் கருத்தரங்கம் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து வாய்ப்புள்ள தொழில்முனைவர்களுக்கு நிதி வாய்ப்பகளை வழங்கும் முயற்சியான, தொழில் திட்டப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு ஆகியவை நடைபெறும்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது,"REI எக்ஸ்போவின் 2015 பதிப்பிற்கான UBM இந்தியாவின் குறிக்கோள், தொழில்துறை, அரசு மற்றும் முதலீட்டாளர்களிடையே உள்ள இடைவெளியை நிரப்புவதாகும். 2022-க்குள் 1,75,000 மெவா-வை எட்டும் இந்திய அரசின் இலக்கிற்கு ஆதரவளிப்பதற்காக, சாத்தியமுள்ள திட்டங்களை செயல்படுத்தவும், "இந்தியாவில் உருவாக்கவும்" இயக்கத்தின் கீழ், உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கவும், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களை எடுத்து வருகின்ற தொழில்துறை ஊக்கியாக REI கண்காட்சி செயல்படும். சுருக்கமாகச் சொல்லப் போனால், பல நாடுகளின் பங்கேற்பு, சிறந்த தொழில்நுட்பம், சிக்கனமான தீர்வுகள், தொழில்துறையிலுள்ள முன்னணி நிறுவனங்களின் பங்கேற்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதித்துவம், தங்கள் தயாரிப்பு மற்றும் தீர்வு வழங்கல்களைக் காட்சிப்படுத்தும் மிகச்சிறந்த உலக பிராண்டுகள் மற்றும் உள்ளடக்கம் செறிந்த மாநாடு ஆகியவற்றுடன், இத்துறையில், உலகின் 2வது மிகப் பெரிய நிகழ்ச்சியாக REI 2015 அமையும்."
தகவல் தொடர்புகள் துறை அமைச்சரான மேன்மை தங்கிய, மிஸ். ஆமி ஆடம்ஸ் கூறியதாவது, "நியு ஜிலாந்தின் புத்தமைவுக்கான வலிமை பொருந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் நியு ஜிலாந்த் நிறுவனங்களின் குழு ஒன்றுடனும், புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கான எங்கள் சிறப்புத் தூதுவரான டாக்டர் மைக்கேல் ஆலன் அவர்களுடனும் இன்று இங்கிருப்பது எனக்குப் பெருமை அளிப்பதாக உள்ளது. இந்த நிறுவனங்களில், இந்தியச் சந்தைக்குள் நுழைவதை எதிர்நோக்கும் நன்கு அமையப்பெற்ற தொழில்நுட்ப ஏற்றுமதியாளர்கள் முதல், இந்தியாவின் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மற்றும் க்ளீன்டெக் துறைகளில் முன்னோடி வாய்ப்புகளை ஆராய்வதற்காக இங்குள்ள ஆரம்பநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் வரை அடங்கும். இந்நிறுவனங்கள், இநதியச் சந்தைக்கு தங்கள் தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை எடுத்து வருகின்ற பொறுப்புறுதியைக் கொண்டவையாகும்."
இந்த ஆண்டின் கண்காட்சியானது, "நாளைய எரிபொருள் ஆற்றலின் பயனை இன்றே துய்த்தல் - ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை" என்ற தலைப்பிலான ஓர் ஆற்றல்மிக்க மாநாட்டை நடத்துகிறது. உலகம் முழுவதிலிருந்தும் புகழ்பெற்ற தொழில்துறை பேச்சாளர்கள், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொடர்பான முக்கிய பிரச்னைகள் மற்றும் போக்குகளைப் பற்றியும், இந்தியாவில் சூரிய எரிசக்தி மற்றும் காற்றாற்றலின் நிலை பற்றியும், வரிசையான இணை அமர்வுகளில் கலந்துரையாடினார்கள். முதல் நாளில் நடைபெற்ற முக்கிய கலந்தாலோசனை தலைப்புகளில் சில வருமாறு:
இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி கண்காட்சி (REI)-க்கு முன்னதாக, சிறப்பு மிக்கவையைக் கொண்டாடுவதையும், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட விருதுகள் வழங்கும் இரவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. எனவே, இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி இந்தியா விருதுகள், இத்துறையில் புத்தமைவுகள் மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை நிறுவனங்களுக்கு வழங்கியது.
எர்னஸ்ட் அன்ட் யங்-ஐ செயல்முறை ஆலோசகர்களாகவும், ஆவலான் குளோபல் ரிசார்ச்-ஐ அறிவாற்றல் பங்காளர்களாகவும் கொண்டு, திரு. அமித் குமார், முதல்வர் (தொலைதூர மற்றும் குறுகிய காலக் கல்வி), TERI பல்கலைக்கழகம்; திரு. சிராக் மேத்தா, இயக்குனர், க்ளிப் ஃபைனான்ஷியல் மற்றும் டாக்டர் பிபேக் பந்தோபாத்யாய், மூத்த ஆலோசகர், பேஸ் D டெக்னிகல் அசிஸ்டன்ஸ் புரோகிராம், முன்னாள் ஆலோசகர், புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் ஆகிய தொழில்துறை வல்லுனர்கள் அடங்கிய ஒரு நடுவர் குழுவால், முன்னணி RE உற்பத்தியாளர்கள், SLDC, முன்னணி RE மேம்பாட்டாளர்கள் மற்றும் EPC ஆகியோரின் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டன.
டாக்டர் சமன்லால் குப்தாவுக்கு ஆயுட்கால சாதனை விருது வழங்கப்பட்டது மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகத்தின் ஐடி செயலரான திரு. தருண் கபூருக்கு தனிநபர் சிறப்பிற்கான விருது வழங்கப்பட்டது.
இவ்வாண்டு REI விருதின் வெற்றியாளர்கள், விக்ரம் சோலார் பிரைவேட் லிமிடெட், கமேஸா ரின்யூவபிள் பிரைவேட் லிமிடெட், ஆபெல்லான் க்ளீன் எனர்ஜி, ஸ்டேட் லோடு டிஸ்பாட்ச் சென்டர் - குஜராத், அக்மே க்ளீன்டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரின்யூ பவர் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டெர்லிங் அன்ட் வில்சன் பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஆகும்.
REI விருதுகளுடன் சேர்த்து, UBM இந்தியா, "இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி நிறுவனங்கள்" என்ற ஒரு சேகரிப்பாளர் பதிப்பு வெளியீட்டையும் அறிமுகப்படுத்தியது, இது, 2014-15 நிதியாண்டில் இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொழிலின் வளர்ச்சியை வர்ணிக்கின்ற மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையிலுள்ள முன்னணி நிறுவனங்களின் விவரங்களை அளிக்கின்ற ஒரு முதன்மை வெளியீடாகும்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் ubmindia.in.
ஊடகத் தொடர்பு
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-022-6172-7353
UBM இந்தியா
Share this article