டெல்லி, September 14, 2015 /PRNewswire/ --
உலக அளவிலான ஆர்வம், சர்வதேச முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பச் சாதனைகள் 9வது பதிப்பின் சிறப்பம்சங்களாகும்
தனது சிறப்புமிக்க நிகழ்ச்சியான, இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி கண்காட்சி (REI)-ன் 9வது பதிப்பை UBM இந்தியா செப்டம்பர் 23 முதல் 25 வரை, கிரேட்டர் நொய்டாவிலுள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் நடத்தும். REI ஓர் உலகளாவிய தளமாகும், இதில், தொழில்துறையின் போக்குகள், சவால்கள் மற்றும் இந்திய ஒழுங்கமைப்பு கட்டமைப்பு உள்ளிட்ட சந்தை குறித்த கணிப்புகளை கலந்தாலோசிப்பதற்காக, அயல்நாட்டு பங்கேற்பாளர்கள் உட்பட, இந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயம் ஒன்றுகூடுகிறது. இந்நிகழ்ச்சி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலவளங்களின் பயன்பாடுகளை மேம்படுத்தி, அவற்றைப் பொதுப் போக்கிற்குக் கொண்டுவருதல், புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துதல், தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டுத் தளத்தின் வாயிலாக கலந்தாலோசனைகளுக்கு மேலும் வளமூட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141027/10109418 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
REI இந்தியா 2015, சீனா, ஜப்பான், இத்தாலி, தைவான், கனடா மற்றும் யூஎஸ்ஏவிலிருந்து நாட்டு அரங்குகளைக் கொண்டிருக்கும் மற்றும் நியூஸிலாந்தின் நீதித்துறை, நீதிமன்றங்கள், தகவல்தொடர்புகள் மற்றும் ஒலிபரப்பு அமைச்சரான மேன்மை தங்கிய மிஸ். ஆமி ஆடம்ஸ் வழிநடத்தும் தொழில் நிறுவனங்களுக்கான ஒரு பிரதிநிதிக் குழுவும் இதில் கலந்து கொள்ளும். புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் - இந்திய அரசு (MNRE), இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA), ஆந்திர பிரதேச புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் (NREDCAP), காற்று எரிசக்திக்கான தேசிய நிறுவனம் (NIWE), இந்தோ-ஜெர்மானிய எரிசக்தி குழு உதவி அலுவலகம் (IGEF), தமிழ்நாடு சூரிய எரிசக்தி மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு (TNSEDA), சூரிய எரிசக்தி மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய உயிரிவாயு கூட்டமைப்பு ஆகியவை இந்நிகழ்ச்சியை வரவேற்று, ஆதரவளிக்கின்றன, மேலும் திரு. உபேந்திர திரிபாதி, செயலர், புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம், இந்திய அரசு, திரு. காமேஸ்வர ராவ், எரிசக்தி, நுகர்பயன்கள், மற்றும் சுரங்கப்பணி தலைவர், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், திரு. முனேஹிகோ சூச்சியா, செயலதிகார இயக்குனர், NEDO, ஜப்பான், திரு. தில்லான் பானர்ஜி, வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர், அமெரிக்க தூதரகம், புது டெல்லி, டாக்டர். மார்டின் ஹன்ஸ், தூதின் துணைத் தலைவர், பொருளாதார மற்றும் உலக விவகாரங்கள் துறைத் தலைவர், இந்தியாவிலுள்ள ஜெர்மானிய கூட்டாட்சிக் குடியரசின் தூதரகம், டாக்டர் S கோமதிநாயகம், முதன்மை இயக்குனர், காற்று எரிசக்திக்கான தேசிய அமைப்பு, இந்திய அரசு, திரு. அஜய் ஜெயின், அரசுச் செயலர், ஆந்திர பிரதேச அரசு, திரு. அர்விந்த் குமார், செயலர் (FAC), தெலிங்கானா அரசு, திரு. S.K. சுக்லா, முக்கிய செயலதிகாரி, நட்டீஸ்கர் மாநில புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு முகமை, டாக்டர் அஜய் மாத்தூர், தலைமை இயக்குனர், எரிசகதி ஆற்றல் வாரியம், மேன்மை தங்கிய திரு. வில்மர்ரிஸாலி இந்திரகேசுமா, இந்தோனேசியக் குடியரசு தூதரகம், விவகாரங்களின் பொறுப்பாளர், திரு. ராடு ஆக்டேவியம் டாப்ரே, ருமேனிய தூதரகம், மேன்மை தங்கிய திரு. டேனியல் கார்மன், இஸ்ரேல் தூதரகம், H.E. திரு. பெட்கோ டோய்கோவ், பல்கேரிய தூதரகம், மேன்மை தங்கிய திரு. டோமாஸ் லுகாஸ்ஸுக் , போலந்து குடியரசு தூதரகம் ஆகிய முக்கியப் பிரமுகர்களும் இதில் பங்கேற்பார்கள்.
உற்பத்தியாளர்கள், EPC-க்கள் மற்றும் சேவை வழங்குனர்களை ஒன்று சேர்த்துள்ள REI 2015 வர்த்தகக் கண்காட்சியில், பெர்கன் அசோசியேட்ஸ், பாஷ் சோலார் எனர்ஜி, பான்ஃபிக்லியோலி ரின்யூவபிள் பவர், கன்வர்ஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட், கனடியன் சோலார், டெல்டா பவர் சொல்யூஷன் (I) பிரைவேட் லிமிடெட், EMMVEE ஃபோட்டோவோல்டெய்க் பவர் பிரைவேட் லிமிடெட், எனர்பார்க் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், GE, ஜீனஸ் இன்னொவேஷன் லிமிடெட், ஹர்ஷா அபாகஸ் சோலார், ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜீஸ், மஹிந்திரா சஸ்டேன், நியூவோசால் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், ஃபோகாஸ் இந்தியா சோலார் பிரைவேட் லிமிடெட், ரிஜன் பவர்டெக் பிரைவேட் லிமிடெட், ரோல்டா பவர் பிரைவேட் லிமிடெட், ஸீமென்ஸ் லிமிடெட், ஸ்கைபவர் குளோபல், ஸ்டெர்லிங் வில்சன், சன் எடிசன் சோலார் பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், சுஸ்லான், விக்ரம் சோலார் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட மேலும் பல பங்கேற்கும் காட்சியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி, புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்துவதற்கான அறிமுகத் தளமாகவும் அமையும். தங்கள் சோலார் PV மாட்யூல்களின் சஃபையர் வகைகளை நவிடாஸ் கிரீன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அறிமுகப்படுத்தும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இயற்கையான பகல் நேர ஒளியையும், மின் உற்பத்தியின் நன்மையையும் பெறுவார்கள்; 60 செல்களில் 260 வாட் மாட்யூலுடன் உயர் ஆற்றல் 4 பஸ் பார் செல்லை PV பவர் டெக் அறிமுகப்படுத்தும், அதே நேரத்தில் ஸ்டௌப்லி டெக் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் MC4 EVO 2-ஐ அறிமுகப்படுத்துகிறது, இது அனைத்து பருவநிலை சூழல்களுக்கும் பொருத்தமான சந்தையிலுள்ள முதல் PV கனெக்டர் ஆகும், இதற்கு UV, அமோனியா, உப்பு மூட்ட தெளிப்பு மீதான எதிர்ப்புத்தன்மை மற்றும் உயர் IP பிரிவு (IP68) மற்றும் 69 A வரையிலான உயர் மின் தரநிர்ணயம் ஆகியவற்றிற்குத்தான் நன்றி கூறவேண்டும். ஏராளமான வகை கேபிள்களுக்கு இந்த MC4 EVO2 பொருந்துகிறது மற்றும் அசல் MC4 தயாரிப்புகள் அனைத்திற்கும் முழுமையான ஒத்திசைவு கொண்டதாகும்.
இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களில், சோலார் காருடன் நேரடி அனுபவம், பயிலரங்கங்கள் மற்றும் குளோபல் சஸ்டெயினபிள் எனர்ஜி சொல்யூஷன்ஸ் (GSES)நடத்திய பிரமாண்டமான வகுப்புகள், முதலீட்டாளர்களிடமிருந்து நிதி பெறுவதற்கு சாத்தியமுள்ள தொழில் முனைவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் தொழில் திட்டப் போட்டி, அறிமுகத்திற்கான தளமான புத்தமைவு உலகம், திறன் உருவாக்கத்தின் மீது காற்று எரிசக்திக்கான தேசிய அமைப்பு (NIWE) நடத்திய தொழில்நுட்பக் கருத்தரங்கம் ஆகியவை அடங்கும்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது,"REI எக்ஸ்போவின் 2015 பதிப்பிற்கான UBM இந்தியாவின் குறிக்கோள், தொழில்துறை, அரசு மற்றும் முதலீட்டாளர்களிடையே உள்ள இடைவெளியை நிரப்புவதாகும். 2022-க்குள் 1,75,000 மெவா -வை எட்டும் இந்திய அரசின் இலக்கிற்கு ஆதரவளிப்பதற்காக, சாத்தியமுள்ள திட்டங்களை செயல்படுத்தவும், "இந்தியாவில் உருவாக்கவும்" இயக்கத்தின் கீழ், உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கவும், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களை எடுத்து வருகின்ற தொழில்துறை ஊக்கியாக REI கண்காட்சி செயல்படும். சுருக்கமாகச் சொல்லப் போனால், பல நாடுகளின் பங்கேற்பு, சிறந்த தொழில்நுட்பம், சிக்கனமான தீர்வுகள், தொழில்துறையிலுள்ள முன்னணி நிறுவனங்களின் பங்கேற்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதித்துவம், தங்கள் தயாரிப்பு மற்றும் தீர்வு வழங்கல்களைக் காட்சிப்படுத்தும் மிகச்சிறந்த உலக பிராண்டுகள் மற்றும் உள்ளடக்கம் செறிந்த மாநாடு ஆகியவற்றுடன், இத்துறையில், உலகின் 2வது மிகப் பெரிய நிகழ்ச்சியாக REI 2015 அமையும்."
இக்கண்காட்சியில், "இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி காட்சி - வெற்றிக்கான அளவுருக்களை உருவாக்குதல்" என்ற தலைப்பிலான ஓர் ஆற்றல்மிக்க மாநாடும் அடங்கும். உலகம் முழுவதிலிருந்தும் புகழ் பெற்ற தொழில்துறை பேச்சாளர்கள், இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, சூரியஒளி மற்றும் காற்றாற்றல், 2020-க்குள் 100 GW மற்றும் 70 GW-க்கு அவற்றை அதிகரிப்பதற்கான யுக்திகள், கொள்கை குறுக்கீடுகள், உற்பத்தியை அடையும் நிலை, இடர்களைக் குறைக்கும் அதே நேரத்தில், திட்டங்களுக்கான நிதி வாய்ப்புகள், ஸ்மார்ட் கிரிட் முன்னோடித் திட்டங்கள், ஜியோதெர்மல் ஆற்றல் நிலை மற்றும் உயிரி ஆற்றல் ஆகியவை தொடர்பான முக்கியப் பிரச்னைகள் மற்றும் போக்குகள் குறித்து பேசுவார்கள். மூன்று நாட்களில், மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவிருக்கும் சில முக்கியத் தலைப்புகள் வருமாறு:
வர்த்தகக் கண்காட்சிக்கு முன்னதாக, சிறப்புமிக்கவையைக் கொண்டாடுவதையும், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி இந்தியா விருதுகள் 2015 என்ற நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சி, புத்தமைவுகள் மற்றும் சீரிய சிறப்பில் தங்களுடைய தனித்துவமான சாதனைகளையும், திறன்களையும் காட்சிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை நிறுவனங்களுக்கு வழங்குகிறது. உதவும் பங்காளர்களான, செயல்முறை ஆலோசகர்களாகச் செயல்பட்ட எர்னஸ்ட் & யங் மற்றும் அறிவாற்றல் பங்காளராக இருந்த ஆவலான் குளோபல் ரிசர்ச் ஆகிய நிறுவனங்களுடன், இந்தியாவின் திறனில் மிகச்சிறந்தவற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன், இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, தொழில்சார் முறையிலும், முறையாகவும் நடத்தப்படும்.
REI விருதுகளுடன் சேர்த்து, UBM இந்தியா, "இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி நிறுவனங்கள்" என்ற ஒரு சேகரிப்பாளர் பதிப்பு வெளியீட்டையும் அறிமுகப்படுத்தும், இது FY14 -15 நிதியாண்டில் இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொழிலின் வளர்ச்சியை வர்ணிக்கின்ற மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையிலுள்ள முன்னணி நிறுவனங்களின் விவரங்களை அளிக்கின்ற ஒரு முதன்மை வெளியீடாகும்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா, மக்களை ஈடுபடுத்தி, தொழில்களுக்கு வளமூட்டும் இந்தியாவின் முன்னணி நேரடி ஊடக மற்றும் நிகழ்வுகள் நிறுவனமாகும். UBM இந்தியாவிலுள்ள நாங்கள், ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள், தொழில்நுட்ப ஊடகங்கள், நேரடி நிகழ்ச்சிகள், தரவு சேவைகள் மற்றும் ஆற்றல்மிக்க ஊடக பிராண்டுகள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்குகிறோம். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா,
[email protected],
+91-022 61727353,
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article