மும்பை, September 2, 2015 /PRNewswire/ --
- 660 நகரங்களில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தயாரிப்பு வகைகளுக்காக 30 ஆயிரம் முன்பதிவுகள்
- ஜென்ஃபோன் 2 லேசர் 5.5-ன் ஸ்டாக் முழுவதும் தீர்ந்துவிட்டது
இம்மாதத்தின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 புத்தம் புதிய ஆசுஸ் ஸ்மார்ட்ஃபோன் சாதனங்களுக்கு (ஜென்ஃபோன் 2 லேசர், ஜென்ஃபோன் 2 டீலக்ஸ் மற்றும் ஜென்ஃபோன் செல்ஃபி), ஆகஸ்ட் 19, 2015 அன்று முன்பதிவுகள் செய்யப்பட்டன. கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தனது தயாரிப்புகளின் வகைகளுக்கு 30 ஆயிரம் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் இன்று உறுதி செய்தது. ஆசுஸின் கணிப்பானது, ஃப்ளிப்கார்ட்டிலிருந்து பெறப்பட்டதாகும், இந்தியா முழுவதும், 660 நகரங்களிலிருந்து 30 ஆயிரம் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150831/10129353)
ஜென்ஃபோன் 2 பெற்ற மிகப் பெரிய வெற்றிக்குப்பின், பல்வேறு சந்தைப் பிரிவுகளை இலக்காகக் கொள்வதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது; இதில் ஒன்று, மக்களை மிகவும் கவரும் செல்ஃபிக்கள் (ஜென்ஃபோன் செல்ஃபி), மற்றும் இரண்டாவது, ஜென்ஃபோன் 2 டீலக்ஸ் மற்றும் ஜென்ஃபோன் 2 லேசர் ஆகிய இரண்டு சாதனங்களும் வழங்கும் உயர்ந்த அம்சங்களை வழங்குவது.
http://www.flipkart.com/asus/zenfone-2/new-ranges?otracker=hp_nmenu_sub_electronics_0_Asus
ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படி, முன்பதிவுக்குக் கிடைக்கச் செய்யப்பட்ட 3வது நாளே இச்சாதனத்தின் ஸ்டாக் முழுவதும் தீர்ந்துவிட்ட நிலையானது இந்நிறுவனத்தின் ஜென்ஃபோன் 2 லேசர் தற்போது நுகர்வோரின் விருப்பத்திற்குரிய ஒன்றாக முன்னணியில் இருப்பதைக் குறிக்கிறது. பதிவுகளின்படி, லேசர் 5.5' (கருப்பு வண்ண மாடல்) மிகவும் விரும்பப்படுகின்ற வண்ணமாக இருப்பதுடன், இதற்கு மட்டும் 10 ஆயிரம் யூனிட்டுகள் முன்பதிவாகியுள்ளன. இதுவரை கண்டிராத அதிகரித்த தேவை காரணமாக, ஜென்ஃபோன் 2 லேசர் 5.5'-க்கான ஸ்டாக் முற்றிலுமாக 100% தீர்ந்துவிட்ட நிலையை இந்நிறுவனம் எதிர்கொண்டது. ஆனால் நுகர்வோரின் தேவைக்கு ஈடுகொடுத்து மீண்டும் ஸ்டாக்குகளை நிரப்பி இந்நிறுவனம் சமாளித்துள்ளதால், இப்போது ஃப்ளிப்கார்ட்டில் முன்பதிவுக்கு ஜென்ஃபோன் 2 லேசர் 5.5' கிடைக்கிறது.
ஆசுஸ் பற்றி
ஆசுஸ், ஓர் உலகளாவிய, முதல் மூன்று நுகர்வோர் நோட்புக் விற்பனையாளரும், உலகின் விற்பனையில் சாதனை படைக்கின்ற, விருது வெல்லும் மதர்போர்டுகளின் உற்பத்தியாளரும் ஆகும். புதிய டிஜிட்டல் தலைமுறையின் முன்னணி நிறுவனமான ஆசுஸ், மதர்போர்டுகள், கிராஃபிக்ஸ் கார்டுகள், ஆப்டிகல் டிரைவ்கள், டிஸ்பிளேக்கள், டெஸ்க்டாப் மற்றும் அனைத்தும் அடங்கிய பிசிக்கள், நோட்புக்குகள், நெட்புக்குகள், சர்வர்கள், மல்டிமீடியா சாதனங்கள், ஒயர்லெஸ் தீர்வுகள், வலையமைப்பு சாதனங்கள், டாப்லெட்டுகள், ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அணியத்தக்கவை உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுடன், இன்றைய டிஜிட்டல் சார்ந்த வீடு மற்றும் அலுவலகத்தின் தேவைகளைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்கின்ற பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. புத்தமைவினால் தூண்டப்பட்டு, தரத்திற்கு பொறுப்புறுதி ஏற்றுள்ள ஆசுஸ், 2014-ல் 4,326 விருதுகளை வென்றுள்ளதுடன், தனது Eee PC™ மூலம் பிசி தொழில்துறையை புரட்சிகரமாக ஆக்கியதற்கான மிகப்பெரிய பெருமையையும் பெற்றுள்ளது. ஆசுஸ், உலகம் முழுவதும் 13,600-க்கும் அதிகமான பணியாளர்களுடன், 4,500 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த ஓர் R&D குழுவையும் கொண்டுள்ளது. 2014-க்கான இந்நிறுவனத்தின் வருமானம் சுமார் US$14.5 பில்லியன் ஆகும்.
வலைத்தளம் - http://www.asus.com/in/
ஊடகத் தொடர்பு:
மனோஜ் குமார்
[email protected]
+91-9818520082
ஆசுஸ் இந்தியா
Share this article