சென்னை, August 28, 2015 /PRNewswire/ --
ஓஎஸ்ஹெச் சென்னை 2015 , தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு சேவை செய்கின்ற தென் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக நிகழ்வு, துறையின் ஆற்றலையும் செல்லும் பாதையையும் தென்னிந்தியாவில் வலியுறுத்துகிறது. யூபிஎம் இந்தியாவால் ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஆகஸ்டு 21ஆம் நாள் நிறைவடைந்தது. முன்னணி பிரமுகர்களான, ஸ்ரீ ஆர்.பட்டாச்சாரியா, துணை தலைவர், அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏஈஆர்பி), இந்திய அரசாங்கம்; ஸ்ரீ ஜி.எம்.இ.கே.ராஜ், பணிப்பாளர் நாயகம் (ஓய்வு) பொது இயக்குநரகம் தொழிற்சாலை அறிவுரை சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள், இந்திய அரசாங்கம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்; மைக்கேல் பென், மூத்த துணை தலைவர், சந்தைப்படுத்தல் மற்றும் சர்வதேச விற்பனை, வில்லியம்சன்-டிக்கீ உற்பத்தி நிறுவனம்; மைக் பின்னீ, தலைவர், டிக்கீஸ், வடக்கு அமெரிக்கா, வில்லியம்சன் டிக்கீ உற்பத்தி நிறுவனம்; மற்றும் திரு ரிய்ன்ஹோல்ட் ஈசென்பார்த், பிராந்திய பிரிவு மேலாளர் சுரங்க தொழில், மத்திய கிழக்கு/ஆப்பிரிகா/தென் மேற்கு ஆசியா & பிராந்திய சந்தைப்படுத்தல் மேலாளர், ட்ராகர் சவுத் ஆப்பிரிக்கா (பிராப்ரியேட்ரி) லிமிடெட், ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150827/10129256-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150827/10129256-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150810/10128411 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த இரண்டு நாள் நிகழ்வு அனைத்து தொழிற்துறைகளிலுமுள்ள தொழில்முறையாளர்களுக்கு உலகளாவிய மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், ஆலோசகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறை குறித்து உரையாடுவதற்கான ஒரு தொழிற்துறை தளத்தை அளித்தது. இந்த வர்த்தக கண்காட்சியின் இரண்டு நாட்களில் ஏறத்தாழ 67 நிறுவனங்கள், 2200க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட மாநாட்டு பிரதிநிதிகள் ஆகிய தொழிற்துறை சபை ஒன்று இருந்தது. பால்சன் இன்டர்நேஷனல், சிர்ரஸ், டிக்கீஸ், ஹனீவெல், டூபாண்ட், டிராகர், காஸ்மோஸ், உத்யோகி பிளாஸ்டிக்ஸ், கரம், சுயர் சேஃப்ட்டி, லைஃப்கியர், ஆக்செண்ட் இன்டஸ்ட்ரீஸ், கேஈஎல், தாரா லோஹியா, ரெஸ்போ பிராடக்ஸ்ட்ஸ், அலைடு சேஃப்ட்டி எக்யுப்மென்ட்ஸ் உள்ளிட்ட் பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டன.
இந்த நிகழ்வின் முக்கிய தனிச்சிறப்பு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கலந்துரையாடல்மிக்க உலகளாவிய மாநாடு, அதில் திரு.ஜெ.சி.சேகர், சிஈஓ & துணை நிறுவனர், எம்காம்பிளை டெக்னாலஜீஸ் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட், திரு.ஸ்டீஃபன் பிலிப் ஸ்டோரீ, தலைவர்-ஈஹெச்எஸ்-ஹெவி சிவில் இன்ஃப்ரா ஐசி, லார்சென் & டர்போ லிமிடெட், திரு.வி.கே.ஷேசாத்ரி, தலைமை ஈஹெச்எஸ் , பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், திரு.அர்விந்த் போதான்கர், உலகளாவிய தலைவர் - பேண்தகைமை, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். கலந்துரையாடல்மிக்க சான்றளிக்கப்பட்ட வகுப்பறை பாணியிலான பட்டறை, உள்ளே நடந்து வரும் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டு இருப்பதும், பங்கேற்பாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இதில் மிக முக்கியமான செய்தி தொழிலாளர் தொகுப்பிற்கும் அமைப்புகளுக்கும் பாதுகாப்பு கலாச்சாரத்தை எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்பது தான்.
இந்நிகழ்வை நிறைவு செய்யும்படியாக, யோகேஷ் முத்ராஸ், செயல்பாட்டிலுள்ள மேலாண்மை இயக்குநர், யூபிஎம் இந்தியா, இவ்வாறு கூறினார், "தொழிற்துறை வாதிடுகின்ற தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நாங்கள் எதிரொலிக்கிறோம், இது அரசாங்கத்தின் 'ஸ்கில் இந்தியா' முயற்சியோடு இணங்கி, தகுதி நிலைகளை உலக அளவிற்கு உயர்த்தும்படி தொழிலாளர்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒரு பாதுகாப்பான சுகாதாரமான தொழிலாளர் தொகுப்பு உற்பத்தியை அதிகரிக்கும், அதன் விளைவாக நிகழ்வுகளை நிகமாக்குவதில் முக்கியத்துவம் பெறுவதை நிரூபிக்கும். சென்னையில் ஓஎஸ்ஹெச் இந்தியா உலக போக்குகளுக்கு இணையாக வேகத்தில் இருக்க துறைக்கு உதவுவதிலும், அதே சமயம் தங்கள் வர்த்தகங்களை வளர்த்து, அதன் விளைவாக தன்னுடைய வளரும் தொழில்துறை தொகுப்புகளின் நலனை காப்பதிலும் உதவுவதில் ஒரு வெற்றிகரமான முயற்சியாக இருந்துள்ளது. நிகழ்விலே அதிகரித்த சர்வதேச பங்கேற்பு இந்தியாவில் இந்த பிரிவின் வளர்ச்சிக்கான ஆற்றலை ஊக்கப்படுத்தியுள்ளது."
யூபிஎம் இந்தியா பற்றி
யூபிஎம் இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. யூபிஎம் இந்தியா ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு யூபிஎம் ஆசியா நிறுவனமான, யூபிஎம் இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. யூபிஎம் ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள யூபிஎம் பிஎல்சிக்கு சொந்தமானது. யூபிஎம் ஆசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் http://www.ubmindia.in.
ஊடக தொடர்பு
பிரியா பாட்ஷா
[email protected],
022 6172 7353,
யூபிஎம் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
Share this article