புது தில்லி, August 24, 2015 /PRNewswire/ --
யூபிஎம் இண்டெக்ஸ் ஃபேர்ஸ், இந்த முதன்மையான கண்காட்சியின் புரவலர், இன்டெக்ஸ் இன்று சமையலறை மற்றும் குளியலறை தொழிற்துறைக்கான தனது முன்னோடியான இந்தியா கிச்சன் & பாத் 2015 (21-23 ஆகஸ்டு, பிரகதி மைதான், புது தில்லியில் நடைபெறுகிறது) கண்காட்சியை தொடங்கி வைத்தது. இந்த கண்காட்சியானது சிறந்த தொழில் வடிவமைப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களான ஏஆர். கரண் க்ரோவர்; பிரதாப் ஜாதவ், தலைவர், இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் இன்டீரியர் டிசைனர்ஸ் (IIID); மோஹன் தேஷ்பாண்டே, தலைவர், விருந்தோம்பல் வாங்குதல் மேலாளர்கள் கருத்துக்களம் மற்றும் பிரபல்யமான மாஸ்டர் செஃப் ரன்வீர் பிரார் உள்ளிட்டோரால் தொடங்கிவைக்கப்பட்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150821/10128985 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150817/10128725 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் இண்டீரியர் டிசைனர்ஸ் (IIID), அனைத்து இந்திய வன்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் விருந்தோம்பல் வாங்குதல் மேலாளர்கள் கருத்துக்களம் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டு, மூன்று நால் வணிக கண்காட்சியானது சமையலறை மற்றும் குளியலறை சாதனங்கள், ஓஈஎம் வெள்ளை சரக்குகள், உபரிபாகங்கள், சமயலறை மற்றும் குளியலறை சாமான்கள், ஃபிட்டிங்குகள், விளக்கு பொருட்கள் ஆகியவற்றை வாங்குபவர்கள் மற்றும் வணிகர்கள் அவர்களோடு விருந்தோம்பல், கார்ப்பரேட் மற்றும் அரசாங்க துறைகளில் இருந்து கட்டமைப்பாளர்கள், உள்ளார்ந்த வடிவமைப்பாளர்கள், கட்டுமானதொழிலாளர்கள், செயல்திட்ட வாங்குநர்கள் மற்றும் வணிகர்களை, ஆலோசகர்கள், கொள்முதல் தலைவர்கள் ஆகியோரை ஒருசேர கொண்டு வந்தது. போர்சிலேனோசா, கியூவோ, ஆக்ரிசில், ஃபேபர், கோத்ரேஜ் இன்டீரியோ, ஹாஃபீலே, ஜெபி கிளாஸ், காஃப் அப்லைனயன்சஸ், கோலர், டிஎஸ் டோர்ஸ், மார்மோ ஹோம், காலின்ஸ், நிமோபெல், ஆஸ்வால் ஹார்டுவேர், ஆய்ஸ்டர் பாத், பிரிஸ்டீஜ், ராயல் கிட்சன்ஸ், டிஇசட் [ஏனல்கள், யுனீக் இனொவேஷன்ஸ், விக்ட்ரினாக்ஸ், வியெகா ஜிஎம்பிஹெச் மற்றும் வெல்கோனா, உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையும் வழங்கும் பொருட்களையும் காட்சிக்கு வைத்தனர்
ஆரா ஆர்ட் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கிய ஸ்கல்ப்ச்சர் ஜோன் இக்கண்காட்சியின் தனிச்சிறப்புகளில் உள்ளடங்கியது, இதில் சித்தார்த், ஸ்வாதி பசாரி, ஸ்ரீனியா சவுதுரி, அசுர்வேத், சுரேஷ் குமார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய கலைஞர்களின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன மற்றும் புது தில்லி மற்றும் மும்பையில் உள்ள 12 சிறந்த கட்டிட கலைஞர்களை கௌரவிக்கும் புகழ்பெற்ற குடோஸ் காட்சிப்பெட்டியும் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் இரண்டாம் நாளானது "டிசைன்… வி தேசி ஆர் பி தேசி" எனும் தலைப்பில் ஒரு கலந்துரையாடும் அறிவுபுகட்டும் கருத்தரங்கை IIID நடத்துவதைக் காணும்.
யோகேஷ் முத்ராஸ், செயல்பாட்டிலுள்ள மேலாண்மை இயக்குநர், யூபிஎம் இந்தியா, இவ்வாறு கூறினார், இன்று இந்தியாவில் கூறுநிலை சமையலறை சந்தையானது 2018 ஆம் ஆண்டி 42.93% சிஏஜிஆர் விகிதத்தில் வளர்ச்சி அடையும் என்று முன்கணிக்கப்பட்ட நிலையில், துப்புறவு பொருட்கள் 12-15% வளர்சியைக் காணும். இரண்டு பிரிவுகளுமே பயன்பாட்டில் இருந்து ஆடம்பரத்திற்கு மாற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் ஆடம்பர சந்தையானது 2013 முதல் 2018 வரை நிலையான மதிப்பீடாக 86 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நகர்புற இந்தியாவின் வளர்ச்சியானது கார்ப்பரேட் சூழலில் மற்றும் வளரும் நடுத்தர வர்க்கத்தினரின் தனிநபர் வருமானத்தின் காரணமாக மேலு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வணிக தளத்திற்கான சாத்டிஹ்யம் மற்றும் தேவை தொழிற்துறையினாலும் அவர்களுடைய தொழிற்துறை பங்காளர்களுக்கான பின்னூட்டத்தில் எதிரொலிக்கப்பட்டது. யூபிஎம் இண்டெக்ஸ் ஃபேர்ஸ் இந்தியா இதற்காகவே இந்தியா கிச்சன் & பாத்-ஐ தலைநகரில் தொடங்கிவைத்து இந்தியாவில் உள்ள வளரும் சந்தைக்கான சாத்தியத்தை பிடித்து சேணம்பட்டியுள்ளது."
திரு. எல்.ஏ கான், மேலாண்மை இயக்குநர், யூபிஎம் இண்டெக்ஸ் ஃபேர்ஸ், மேலும் விவரித்தார், "எங்கள் முன்னோடியான வணிக கண்காட்சி, இன்டெக்ஸ், மூலமாக நாங்கள் இந்தியா முழுவதிலும் உள்ள கட்டிட் கலைஞர்கள், உள்ளார்ந்த வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டுபவர்கள்/உருவாக்குபவர்களின் சமுதாயத்துடனும் முக்கிய வணிக மற்றும் வாங்குநர் பிரதிநிதிகள் குழுவோடும் நெருங்கிய தொடர்பையும் நாங்கள் மகிழ்ந்தனுபவிக்கிறோம். கூடுதலாக, எங்களுடைய திட்ட கூட்டமைப்பின் மூலமாக, தொழில்முறையான இயக்கங்களுடன் எங்களுக்கு ஒரு நிலையான உறவு உள்ளது. இந்திய சமையலறை & குளியலறை என்பது கடந்த 26 ஆண்டுகளாக நாங்கள் சேவைசெய்து வரும் தனித்துவமான துறைக்கு எங்கள் சேவைக்கான விரிவாக்கமாக இருக்கிறது."
இந்தியா கிச்சன் & பாத்-இன் தொடக்க நிகழ்வினால் ஊக்கமடைந்த யூபிஎம் இந்தியா இந்த கண்காட்சியின் இரண்டாம் நிகழ்வை 8-10 ஜூலை 2016 என்று திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
யூபிஎம் இந்தியா ஆண்டுதோறும் இன்டெக்ஸ் நிகழ்வை மும்பையில் நடத்துகிறது, இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்வு, இதில் 25,000க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்களும், 300 கண்காட்சியாளர்களும், சீனா, துருக்கி, யுகே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து கலந்துகொள்கின்றனர்.
யூபிஎம் இந்தியா பற்றி
யூபிஎம் இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழிநடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களை அளிக்கிறது. யூபிஎம் இந்தியா ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவு கண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பல நிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு யூபிஎம் ஆசியா நிறுவனமான, யூபிஎம் இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. யூபிஎம் ஆசியா லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள யூபிஎம் பிஎல்சிக்கு சொந்தமானது. யூபிஎம் ஆசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in.
ஊடக தொடர்புகள்
பிரியா பாட்ஷா
யூபிஎம் இந்தியா
[email protected]
அஞ்சலீனா பிரதான்
[email protected]
+91-11-66517646
யூபிஎம் இந்தியா
Share this article