சென்னை, August 21, 2015 /PRNewswire/ --
தென்னிந்தியாவின் ஒரே பணிசார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மீதான வர்த்தகக் கண்காட்சி
இரண்டு நாள் (ஆகஸ்ட் 20-21) பாதுகாப்பு கண்காட்சியான ஆக்யுபேஷனல் சேஃப்டி & ஹெல்த் (OSH) இந்தியா- சென்னையின் 2[வது] பதிப்பை சென்னை டிரேட் சென்டரில் இன்று UBM இந்தியா அறிமுகப்படுத்தியது. இக்கண்காட்சி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளைக் கலந்தாலோசிப்பதற்காகவும், பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காகவும், சர்வதேச புகழ்பெற்ற காட்சியாளர்கள், ஆலோசனையாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய இந்திய அரசு அதிகாரிகளை ஒரு தொழில்துறை தளத்தில் ஒன்றுசேர்த்தது. OSH இந்தியா 2015-ன் தொடக்க விழாவானது, திரு. R. பட்டாச்சார்யா, துணைத் தலைவர், அணுகச்தி கட்டுப்பாட்டு வாரியம் (AERB), இந்திய அரசு; திரு. G.M.E.K. ராஜ், தலைமை இயக்குனர் (ஓய்வு) பொது தொழிற்சாலை ஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர் நிறுவனங்கள், இந்திய அரசு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், திரு. மைக்கேல் பென், மூத்த துணைத் தலைவர், சந்தைப்படுத்துதல் மற்றும் சர்வதேச விற்பனை, வில்லியம்சன்-டிக்கி மேனுஃபாக்சரிங் கம்பெனி மற்றும் திரு. ரவி சனேஜா, மூத்த இயக்குனர், UBM இந்தியா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150820/10128946)
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150810/10128411 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
முன்னணி பங்கேற்பாளர்களான, டிக்கீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், டிராகர் சேஃப்டி இந்தியா பிரைவேட் லிமிடெட், ஹனிவெல் சேஃப்டி புராடக்ட், E.I. ட்யூபான்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், கரம் இன்டஸ்டிரீஸ், பாட்டா இந்தியா லிமிடெட், அக்மி சேஃப்டி வேர்ஸ் லிமிடெட், அக்ஸென்ட் இன்டஸ்டிரீஸ் லிமிடெட், வீனஸ் சேஃப்டி & ஹெல்த் பிரைவேட் லிமிடெட், உத்யோகி பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், லைஃப்கியர் சேஃப்டெக் பிரைவேட் லிமிடெட், ரெஸ்போ புராடக்ட்ஸ், ஷுவர் சேஃப்டி மற்றும் பலரும் பங்கேற்றது, ஒரு தொழில்துறை நிகழ்ச்சி என்ற முறையில் OSH இந்தியா-வுக்கான தேவை மற்றும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இந்திய அரசின் அணுகச்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் (AERB) துணைத் தலைவர்,
திரு. R. பட்டாச்சார்யா கூறியதாவது, "பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், உற்பத்தித் திறன் மீது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது. பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் தேவையை உணர்ந்து கொண்டதன் அடிப்படையில், இந்தியா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பணியாளரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, 2009-ம் ஆண்டில் பணியிட பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான தேசியக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. பாதுகாப்பு பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதை மேம்படுத்தவும், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சமீபத்திய மேம்பாடுகள் குறித்து நமக்கு எடுத்துரைக்கவும் உதவும் வகையில், இந்திய பாதுகாப்பு ஜாம்பவான்களுடன் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான நிபுணர்களுடனும் பரிமாற்றத்தில் ஈடுபடும் தளத்தையும், தனித்துவம் வாய்ந்த வாய்ப்பையும் தொழில்துறை நிபுணர்களுக்கு OSH இந்தியா வழங்குகிறது."
UBM இந்தியாவின் மூத்த இயக்குனரான திரு. ரவி சனேஜா மேலும் விளக்கிக் கூறியதாவது, "குறிப்பிட்ட நாடுகளிலுள்ள உயர் பாதுகாப்பு நிர்ணயங்கள், நீண்ட காலக் கொள்கைகள், வலிமை பொருந்தி பணியாளர் ஆய்வுடன்கூடிய ஊக்கம் தரும் முத்தரப்பு சமூகப் பேச்சுவார்த்தை மற்றும் ஆற்றல்மிக்க ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் விளைவாகும். இந்தியாவில் வளர்ந்துவரும் சந்தைச் சூழல் மற்றும் மிகப் பெரிய அளவிலான பணியாளர்களுக்கான தேவையுடன், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை அமல்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது ஓர் அவசியமாகிவிட்டது. OSH இந்தியா 2015 மீது UBM இந்தியா கவனம் செலுத்தியிருப்பது, இந்த அதிவேக வளர்ச்சி கண்டுவரும் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறையை ஒன்று சேர்ப்பதற்காக ஆகும்."
வட அமெரிக்காவிலுள்ள வில்லியம்சன் டிக்கி நிறுவனத் தலைவரான திரு. மைக் பின்னி கூறியதாவது, "அனைத்து பூகோளப் பகுதிகளிலும், பாதுகாப்பான. நிலைப்படுத்தப்பட்ட பணி உடுப்புகளின் முக்கியத்துவத்தை அதிக மக்கள் உணர்ந்து வரும் நிலையில், பணி உடுப்புகள் உலக அளவில் அதிவேக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தற்போதுள்ள அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முயற்சிகளுடன், மாபெரும் வளர்ச்சிக்கு இந்தியா தயார்நிலையில் உள்ளது. இதனை ஆற்றல்மிக்கதாக ஆக்குவதற்கு, நாம் பணிசார் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்துவதுடன், ஆரம்பத்திலிருந்தே பணியாளரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரும் செயல்முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். இதில், பணி உடுப்புகளும் அடங்கும், ஏனென்றால், ஒவ்வொரு தொழில் துறைக்குமான சரியான உடுப்பானது, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உலக அளவில் பணி உடுப்புகளின் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ள நாங்கள், இந்தியாவில் ஒவ்வொரு பணியாளரையும், அவர் உற்பத்தி, உடல்நலப் பராமரிப்பு, விருந்தோம்பல் மற்றும் பாதுகாப்பு உடுப்பு என எப்பிரிவில் இருந்தாலும், மிகச் சிறந்த பணி உடுப்பை அணியச் செய்யும் இயக்கத்தை தொடங்குவதற்கு ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். தொழில்சார் அபாயங்களைக் குறைப்பதற்காக, முன்வந்து, முன்னோக்கி ஓர் அடியெடுத்து வைப்பது இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமாகும். டிக்கீஸைச் சேர்ந்த நாங்கள், OSH இந்தியா 2015-ன் இம்முயற்சிக்கு ஆதரவளித்து, தற்போதுள்ள மற்றும் தொடங்கப்படவுள்ள நிறுவனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த பணி உடுப்புகளை வழங்குகிறோம்."
OSH இந்தியாவின் இரண்டு -நாள் மாநாடு, நாடு முழுவதிலிருந்தும் மற்றும் முன்னணி சர்வதேச அமைப்புகளிலிருந்தும் பங்கேற்கும் நிபுணர்கள் மூலம் பணிசார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை முன்நிறுத்திய அதே நேரத்தில், உலகளாவிய சிறந்த நடைமுறைகளையும், தொழில்துறை எதிர்கொண்டுள்ள சவால்களையும் கலந்தாலோசித்தது, மேலும் மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்ட தலைப்புகள், "பாதுகாப்பில் சிறப்பினை நோக்கிப் பயணம்: தலைமை முக்கியமானது', 'பொதுவான பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதில் கூட்டு நடவடிக்கை', 'விபத்தைத் தடுப்பதற்கு, அபாயத்தை அடையாளம் காணல் மற்றும் இடர் மதிப்பீடு', 'தொழில்சார் ஆரோக்கியத்தின் இடர் மதிப்பீடு மற்றும் நிர்ணயங்களை உருவாக்குதல்', 'கட்டுமான பாதுகாப்பு - பாதுகாப்பான பணிச்சூழல், பாதுகாப்பான நடத்தையை ஊக்குவிக்கிறது', 'ஒரு நிறுவனத்தின் அடித்தட்டில் பாதுகாப்பு மற்றும் நிலைத்த தன்மை எவ்வாறு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது' என்பவை போன்ற பலவற்றை உள்ளடக்கியிருந்தன.
உச்ச மாநாட்டில் பேசும் முக்கியப் பேச்சாளர்களில், திரு. MC சம்பந்தம், கூடுதல் இயக்குனர், சென்னை மண்டலம், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் இயக்ககம், தமிழ்நாடு அரசு; அர்விந்த் போதங்கர், உலகளாவிய தலைவர் - நிலைத்ததன்மை, ஆரோக்கியம், பாதுகாப்பு & சுற்றுச்சூழல், டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட்; திரு. ஸ்டீஃபன் ஃபிலிப் ஸ்டோரே, தலைவர் EHS,- ஹெவி சிவில் இன்ஃப்ரா IC, லார்சன் & டூப்ரோ லிமிடெட்; திரு. திரு. S. வீரமணி, ஆலோசனையாளர், பாதுகாப்பு, சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL); திரு. J C சேகர், முக்கிய செயலதிகாரி & இணை-நிறுவனர், Mகம்ப்ளை டெக்னாலஜீஸ் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட்/ErND சொல்யூஷன்ஸ் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட்; திரு KS அனிமோன், மூத்த மேலாளர், பாதுகாப்பு, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL); டாக்டர் K.மாமல்லன், மூத்த பொறியாளர் (பாதுகாப்பு ஆரோக்கியம், சுற்றுசூழல் மற்றும் தரம்), சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்; திரு. சுனில் சவுத்தரி, தலைவர் (தீ & பாதுகாப்பு), வோக்ஸ்வாகன் இந்தியா பிரைவேட் லிமிடெட்; திரு. சன்னி ஜார்ஜ், பாதுகாப்பு அதிகாரி, GMR பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், டாக்டர் S. ஸ்ரீதரன், செயல்பாடுகள் பிரிவின் தலைவர் தலைவர், TT அசெம்பிளி இந்தியா மற்றும் ஜப்பானின் டொயோட்டா ஷுஷோ கார்ப்பரேஷனின் பிரிவு, ஆகியோர் அடங்குவர்.
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in .
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
அஞ்சலினா பிரதான்
[email protected]
+91-11-66517646
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article