மும்பை, August 19, 2015 /PRNewswire/ --
தென்னாசியாவின் முன்னணி பயண வர்த்தகக் கண்காட்சியான SATTE-ன் ஏற்பாட்டாளரான UBM இந்தியா, மும்பை வேர்ல்டு டிரேட் சென்டரில், இன்று SATTE மும்பை மேற்கு-ன் 4வது பதிப்பை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு நாள் (ஆகஸ்ட் 18-19) நிகழ்ச்சியை, மஹாராஷ்டிர மாநில சுற்றுலா அமைச்சரும், சிறப்பு விருந்தினருமான திரு. ராம் ஷிண்டே தொடங்கி வைத்தார்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150818/10128830 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150818/10128830-a )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150806/10128259 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
முக்கியமாக மஹாராஷ்டிரம், குஜராத் மற்றும் கோவாவைச் சேர்ந்த பயண வர்த்தக சமுதாயத்திற்கு பயன் தரும் SATTE மும்பை மேற்கில், தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா வாரியங்கள், DMC-க்கள், பயண முகவர்கள் மற்றும் டூர் ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், OTA-க்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் பல அமைப்புகள் பங்கேற்றன. தொழில் வாய்ப்பு உதவிகளுடன் இணைத்துக் கொள்வதற்காகவும், இத்தளத்தின் மூலம் இம்மண்டலத்தில் வலிமையான கூட்டாண்மைகளை உருவாக்குவதற்காகவும். இத்தொழில்துறையைச் சேர்ந்த முக்கிய பொருள் மற்றும் சேவை வழங்குனர்களும் இதில் பங்கேற்பார்கள்.
தொடக்க விழா நிகழ்ச்சியின்போது, மஹாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரான திரு. ராம் ஷிண்டே கூறியதாவது, "இந்த வெற்றிகரமான நிகழ்ச்சிக்காக நான் முதலில் UBM இந்தியாவிற்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். SATTE போன்ற நிகழ்ச்சிகள், சுற்றுலாத்துறைக்கும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தனித்துவமான வாய்ப்புகளாகும். நாம் எப்போதுமே வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அதிகரித்த விழிப்புணர்வையே தேடிச் செல்கிறோம், மேலும் மஹாராஷ்டிர மாநிலத்தை அறிமுகப்படுத்துகின்ற ஒரு வாய்ப்பாக நான் இதை எடுத்துக் கொள்கிறேன். மஹாராஷ்டிரத்தை வழங்கும் ஒரு வாய்ப்பை எனக்கு அளித்தமைக்காக இங்குள்ள ஒவ்வொருவருக்கும் மற்றும் SATTE மும்பை மேற்கிற்கும் எனது நன்றியை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மஹாராஷ்டிரத்தின் சுற்றுலா எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எல்லைகளையும் கடந்த கூட்டுகளை நான் எதிர்நோக்குகிறேன்."
முக்கிய காட்சியாளர்களான ராஜஸ்தான் சுற்றுலாத் துறை, மஹாராஷ்டிர சுற்றுலாத் துறை, சட்டீஸ்கர் சுற்றுலாத் துறை, உத்தர பிரேச சுற்றுலாத் துறை, ஜார்கண்ட் சுற்றுலாத் துறை, மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை, டர்கிஷ் கல்ச்சர் மற்றும் சுற்றுலா அலுவலகம், ENIT இத்தாலிய தேசிய சுற்றுலா வாரியம், டூரிசம் மலேசியா, டூரிசம் ஃபிஜி, உஸ்பெகிஸ்தான் டூரிசம், நீம்ரானா ஓட்டல்கள், ஓயோரூம்ஸ், ZO ரூம்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இன்டிகோ), இன்டர்நெட் மொகல்ஸ், டீ எஸ்டேட் இந்தியா, கிரேடு ஒன் ஈவென்ட்ஸ், சிங்கப்பூரிலிருந்து யுனைடெட் டிராவல்ஸ் அன்ட் டூர்ஸ் மற்றும் பல நிறுவங்கள் சமீபத்திய சேரிடங்கள் மற்றும் வழங்கும் சலுகைகளை வர்த்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "இந்தியாவின் மேற்கு மண்டலம் மஹாராஷ்டிரம், குஜராத், கோவா மற்றும் அருகிலுள்ள பகுதிகளைக் கொண்டதாகும், இவற்றிற்கு தொழில்துறை அறிக்கைகளின்படி, 10% உள்நாட்டு வருகையாளர்கள் மற்றும் 25%-க்கும் அதிகமான அயல்நாட்டு வருகையாளர்கள் உள்ளனர். மேலும், மும்பை, மேற்கிந்தியாவின் நிதிசார் தலைநகராகவும், நுழைவாயிலாகவும் இருப்பது மட்டுமின்றி, உலகளாவிய சேரிட நகரங்கள் அட்டவணை வரைபடத்தின்படி, சர்வதே இரவுநேர பயணிகளின் அடிப்படையில், அதிவேக வளர்ச்சி கண்டுவரும் முதல் 10 நகரங்களில் இடம்பிடித்துள்ள ஆசியா பசிபிக்கின் ஒரே இந்திய நுழைவாகவும் ஆகியுள்ளது. இவ்வாண்டின் முதல் பாதியில் சுமார் 4.75 மில்லியன் மக்கள் ஓர் இரவு மட்டும் மும்பையில் தங்கியுள்ளனர், இது கடந்த ஐந்தாண்டுகளில், இந்நகரில் தங்கிச் சென்ற சர்வதேச வருகையாளர்களின் உயர்ந்த பட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்யும் சாத்தியமுள்ளது. தங்கள் தொழிலை மேலும் வளர்ப்பதற்கும், இந்நகரம் மற்றும் இம்மண்டலத்தின் சுற்றுலா சந்தை வழங்கும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் பயண வர்த்தக சமுதாயத்திற்கு போதிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் SATTE மும்பை மேற்கு மிகச் சரியாக அமைக்கப்பட்டுள்ளது."
மாநாட்டில் இடம்பெற்ற அமர்வுகள், மும்பையை ஓர் உறுதியான வெளிச்செல்லும் வாயிலாக சிறப்பித்துக் காட்டியதுடன், சூரத், நாசிக் மற்றும் நாக்பூர் போன்ற IIம் நிலை நகரங்கள் இம்மண்டலத்தின் முக்கிய சந்தைகளாக உருவாவதையும் சிறப்புடன் எடுத்துரைத்தன.
மேற்கிந்தியா: உள்நாட்டு சுற்றுலா பயன்படுத்தப்படவில்லையா? என்ற முதல் குழுக் கலந்துரையாடலில், ஒவ்வொரு ஆண்டும் அதிவேக வளர்ச்சி கண்டுவரும் துறையான உள்நாட்டு சுற்றுலாவை பாதித்துக் கொண்டிருக்கும் தீவிரமான பிரச்னைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. முராரி மோகன் ஜா-வை நடுவராகக் கொண்ட, சதீஷ் சோனி, இணை நிர்வாக இயக்குனர், MTDC; பவன் ஜெயின், இணை இயக்குனர் (முதலீடுகள்), ராஜஸ்தான் சுற்றுலா; அபிஜித் பாட்டீல், தலைவர், ராஜா ராணி டிராவல்ஸ்; யூசுஃப் பூனாவாலா, தலைவர் - பாரத் தேக்கோ, காக்ஸ் & கிங்ஸ், பாண்டுரங் தவாரே, நிர்வாக இயக்குனர், வேளாண் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று, உள்நாட்டு இயக்கத்தை மேலும் தூண்டுவதற்காக, பொது மற்றும் தனியார் துறைகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பற்றி கலந்தாலோசித்தது.
மும்பை: இந்திய வெளிச்செல்லும் வாய்ப்பினை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா? என்ற இரண்டாவது குழு கலந்துரையாடல், இந்தியாவிலிருந்து வெளிச்செல்லும் சுற்றுலாவை மேலும் ஊக்கப்படுத்தும் சிறந்த செயல்முறைகள் மீது கவனம் செலுத்தியது. IIPT இந்தியாவின் நிறுவனர் தலைவரான திரு.அஜய் பிரகாஷின் தலைமையிலான இக்குழுவில், ஷீதல் மன்ஷா வாத்வா, இயக்குனர், அடவுட் ஃபிரான்ஸ் இந்தியா; கார்ல் வாஸ், இயக்குனர், துபாய் DTCM; சுதீர் பாட்டில், நிறுவனர் & எம்டி, வீணா வேர்ல்டு மற்றும் கரன் ஆனந்த், தலைவர் - உறவுகள், காக்ஸ் & கிங்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப்பெருமைமிக்க குழுவினர், இந்திய பயணிக்கு சேரிடங்களை அமைத்துத் தருவது மட்டுமின்றி, சுற்றுலாவின் இப்பிரிவை உச்சத்திற்குக் கொண்டு செல்ல ஏதுவாக, வெளிச்செல்லுதலை மேலும் மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளைப் பற்றியும் விவாதித்தனர்.
இக்கண்காட்சிக்கு தொழில்துறையின் சிறந்த வரவேற்பு இருந்ததுடன், இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு (TAAI), இந்திய பயண முகவர்கள் ஃபெடரேஷன் (TAFI), சுற்றுலா வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு, டூர் ஆபரேட்டர்களின் இந்திய கூட்டமைப்பு (IATO), இந்திய வெளிச்செல்லும் டூர் ஆபரேட்டர்களின் கூட்டமைப்பு (OTOAI) மற்றும் நாசிக்கின் பயண பயண முகவர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவும் இருந்தது.
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் www.ubmindia.in .
ஊடகத் தொடர்புகள்:
ப்ரியா பாட்ஷா
[email protected]
அஞ்சலினா பிரதான்
[email protected]
011-66517646
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article