சென்னை, July 2, 2015 /PRNewswire/ --
IFSEC இந்தியாவின் ஓம்புனரான UBM இந்தியா, சென்னை டிரேட் சென்டரில், பாதுகாப்பு மற்றும் தீ கண்காட்சி 2015-யை இன்று தொடங்கி வைத்தது. இந்நிகழ்ச்சியை, ESAI-ன் நிறுவனர் தலைவரான திரு. R நந்த் குமார் தொடங்கி வைத்தார். இம்மூன்று நாள் வர்த்தகக் கண்காட்சி, 2015 ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறும் மற்றும் இதற்கு எலக்ட்ரானிக் செக்யூரிட்டி அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ESAI) ஆதரவளிக்கிறது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150701/10126112-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150701/10126112-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
SAFE (பாதுகாப்பு மற்றும் தீ கண்காட்சி) 2015, இம்மண்டலத்திலுள்ள பாதுகாப்பு மற்றும் தீ தொழில்துறையை ஒன்று சேர்த்தது மட்டுமின்றி, உலகளாவிய தொழில்துறை போக்குகள் மற்றும் புதுக் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்திய அதே நேரத்தில், தொழில் நிறுவங்களுக்கு தென்னிந்திய பாதுகாப்புச் சந்தையின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு தொழில்துறை தளத்தையும் வழங்கியது.
இந்தியாவின் தீ பாதுகாப்புச் சந்தையின் சந்தை மதிப்பானது, 2019-ல் அமெரிக்க டாலர் மதிப்பில் 4.94 பில்லியன் அளவையும் கடந்துவிடும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இச்சந்தை அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆண்டுதோறும் 30% வளர்ச்சியுடன், இந்திய வர்த்தகப் பாதுகாப்புச் சந்தையும், 2016-ல் அமெரிக்க டாலர் மதிப்பில் 1.4 பில்லியன் அளவைக் கடந்துவிடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் முயற்சிகள், தீ பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, சொத்து மேலாண்மை மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாடுகளின் அதிகரித்த செயலாக்கம் மற்றும் கடைப்பிடித்தல் தொடர்பான அதிகரித்த விழிப்புணர்வு ஆகியவை, இச்சந்தையின் வளர்ச்சிக்கு மேலும் தூண்டுகோலாக அமைந்துள்ளன.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "மத்திய PSU-க்களில் 25% தங்கள் பதிவுபெற்ற தலைமை அலுவலகங்களை தமிழ்நாட்டில் கொண்டுள்ளனர். தொழில்துறை முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கான அணுகும் வசதி காரணமாக, SAFE 2015-ஐ நடத்துவதற்கு UBM இந்தியா, மாநிலத்தின் தலைநகரை யுக்திசார்ந்த முறையில் தேர்ந்தெடுத்துள்ளது. இம்மண்டலத்திலேயே இத்தகைய வர்த்தக நிகழ்ச்சியாக SAFE 2015 மட்டுமே இருப்பதால், தொழில்துறையின் விநியோகச் சங்கிலியின் சுழற்சியை பலப்படுத்தும் அதே நேரத்தில், இம்மண்டலத்தில் வளரும் சந்தைக்கு சந்தை நுழைவு மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்க UBM இந்தியா எண்ணியுள்ளது."
இந்நிகழ்ச்சி, முக்கிய முடிவெடுப்பவர்களுடன் உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் அதே நேரத்தில், முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுக்கு, வளர்ந்து வருகின்ற ஒரு சந்தையில் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும், புதுமைத் தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் போக்குகளுக்கான ஓர் அறிமுகத் தளத்தையும் வழங்கும்.
- CCTV துறையில் மிகுந்த போட்டி நிறைந்த தங்கள் தனித்துவமான தயாரிப்புகளுடன் வீடியோ கண்காணிப்பு நிறுவனங்களான CP ப்ளஸ், டாஹுவா, ஹைக்விஷன், ஹைஃபோகஸ், யூனிகேம்
- தனது இணையற்ற தொழில்நுட்பம் மற்றும் காட்சிப்படுத்தல் திறனுடன், பெரிமீட்டர் ஆட்டோமேஷன் மற்றும் பார்க்கிங் மேலாண்மை அமைப்பு வகையில், FAAC
- வீடியோ மேலாண்மை மற்றும் கண்காணிப்பில், சிக்கலின்றி வடிவமைக்கப்பட்ட தனது தீர்வுகளை, வீடியோ மேலாண்மை மென்பொருளின் முன்னணி நிறுவனமான, மைல்ஸ்டோன் காட்சிப்படுத்தியது.
கண்காட்சியின் முக்கியப் பங்கேற்பாளர்கள், ஆதித்யா இன்ஃபோடெக், ஏர்லைட், அல்ட்ராக்ஸ் வேர்ல்டு கார்ப்., அரைஸ் சிஸ்டம்ஸ், ப்ளாக் யூனிஃபார்ம்ஸ், புஷ் ப்ளஸ், CP ப்ளஸ், CVG செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், டாஹுவா, டிவைன் ஐ, எலியான்ஸ் கனெக்டர்ஸ், ஹை-ஃபோகஸ், ஹைக்விஷன், க்ரிடிகல் செக்யூர் ஸ்கேன், மேட்ரிக்ஸ், மைல்ஸ்டோன், ரோடு பாயின்ட் இந்தியா, SGT, செக்யூரஸ், செக்யூஃபோர்ஸ், செக்யூரிக்கோ, ஸ்மார்ட்-ஐ எலக்ட்ரானிக்ஸ், ஸ்வராஜ் செக்யூடெக், டாடிரன் TTL, யூனிகேம் சிஸ்டம்ஸ், VCO பேக், XYZ டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட் மற்றும் பலராவர்.
UBM இந்தியா, ஆண்டுதோறும், இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிகழ்ச்சியான IFSEC இந்தியாவை புது டெல்லியில் நடத்துகிறது; இது, தொழில்துறையின் எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்து வருவதன் மூலம், பாதுகாப்புத் துறையில் உலக அளவில் மிகவும் விரும்பத்தக்க அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இக்கண்காட்சியில், ஒவ்வொரு ஆண்டும் 250 கண்காட்சியாளர்கள், பல நாட்டு அரங்குகள் மற்றும் 12,000 வர்த்தக வருகையாளர்கள் பங்கேற்கின்றனர்.
UBM இந்தியா பற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் www.ubmindia.in
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22-6172 7353
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article