மும்பை, May 8, 2015 /PRNewswire/ --
மும்பையிலுள்ள பாம்பே எக்ஸிபிஷன் சென்டரில், பிரிட்ஜஸ் இந்தியாவுடன் இணைந்து நடத்தப்படும் கான்கிரீட் ஷோ இந்தியா 2015-ன் 3வது பதிப்பை UBM இந்தியா இன்று தொடங்கி வைத்தது. இந்த மூன்று நாள் கண்காட்சி (மே 7 முதல் 9 வரை) மற்ற தொழில்துறை பிரமுகர்களின் பங்கேற்புடன், மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகத்தின் (MSRDC) இணை நிர்வாக இயக்குனரான திரு. SM ராம்சந்தானி அவர்களின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. கான்கிரீட் தொழில்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கண்காட்சி, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், எரிசக்தி, இரயில், அணைகள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கியத் துறைகளை உள்ளடக்கியதாகும்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150507/10122334 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150313/10118322 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
கான்கிரீட் ஷோ இந்தியா 2015-க்கு, அமெரிக்கன் கான்கிரீட் இன்ஸ்டிட்யூட்-ன் இந்திய சாப்டர், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிரிட்ஜ் இஞ்சினியர்ஸ், RMCMA (ரெடி மிக்ஸ்டு கான்கிரீட் மானுஃபாக்சரர்ஸ் அசோசியேஷன்), தி இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் இஞ்சினியர்ஸ் ஆகிய முன்னணி கூட்டமைப்புகள் ஆதரவளித்துள்ளன.
இத்துறை சம்பந்தப்பட்ட புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் போக்குகளைக் காட்சிப்படுத்திய இந்நிகழ்ச்சியில், இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கொரியா, தைவான், நெதர்லாந்து, மலேசியா மற்றும் யூஎஸ்ஏ போன்ற நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் இத்தொழில்துறையின் முக்கிய நிறுவனங்கள், டொயோட்டா ஃபார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆஷ்டெக், ஹெஸ் கான்கிரீட் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட், JSW சிமென்ட் லிமிடெட், RMC ரெடிமிக்ஸ் (இந்தியா) கோத்ரெஜ் கன்ஸ்ட்ரக்ஷன், அப்போலோ இன்ஃப்ராடெக் பிரைவேட் லிமிடெட், ஹூண்டாய் அலுமினியம் கம்பெனி லிமிடெட், டாட்டா ஸ்டீல் லிமிடெட், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் ஆகியவையாகும்.
மிகப் பெரிய பாலத் திட்டங்களைச் சூழ்ந்துள்ள பல சிக்கலான பிரச்னைகளுக்கான தீர்வுகள் காணும் குறிக்கோளுடன், தொழில்துறை வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட பிரிட்ஜஸ் இந்தியா 2015, பாலங்களின் கட்டுமானத்திலுள்ள திட்ட செயலாக்கம், செயல்திறன் மற்றும் நிலைத்ததன்மையிலுள்ள இடைவெளிகளை நீக்கும் குறிக்கோளுடன் முக்கிய திட்ட அதிகாரிகளை ஒன்று சேர்க்கின்ற மற்றும் பல்வேறு தீவிர பொறியியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்கின்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சி, வரவிருக்கும் திட்டங்கள், நடைபெற்று வருகின்ற கட்டுமானங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பால உள்கட்டமைப்பிற்குள் போடப்பட்டிருக்கும் முதலீடு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு, இதில் கலந்து கொள்பவர்களுக்கு உதவும். பாதுகாப்பு, பழுதுநீக்கத்திற்கான வாய்ப்பு மற்றும் கட்டுமானத்திற்கான வாய்ப்பினை எட்டும் வகையில், பால வடிவமைப்பு தத்துவங்கள் தொடர்பான தங்கள் பகுப்பாய்வை, தொழில்துறை வல்லுனர்கள் பகிர்ந்து கொள்வார்கள். திட்டங்களின் ஆயுளை அதிகரிப்பதற்காக கட்டுமானம், பராமரிப்பு மற்றும் ஆய்வில் உள்ள சவால்களை சமாளிக்கும் அதே நேரத்தில், கிடைக்கின்ற பல்வேறு தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் ஒப்பந்தங்களை செயல்படுத்துவதுடன் தொடர்புடைய நன்மைகள் மற்றும் சவால்களையும் இத்தொழில்துறை புரிந்து கொள்ள இந்நிகழ்ச்சி உதவும்.
இந்நிகழ்ச்சியில், தொழில்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கலந்தாலோசிப்பதற்கும், ஆராய்வதற்கும் இரண்டு நாள் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. கூட்டத்தின் நிரல் பின்வரும் வலைத்தளத்தில் கிடைக்கும்: http://www.concreteshowindia.com/conference-programme
"புதிய அரசின் முன்னோக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் தொடர்ந்து இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி பெறத் தயார்நிலையில் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தொந்தரவில்லாத, பராமரிப்பு தேவைப்படாத சாலைக் கட்டுமானங்களையே விரும்புகின்றன. கான்கிரீட் ஷோ இந்தியா 2015, கான்கிரீட் மற்றும் கான்கிரீட் தயாரிப்புகளின் சமீபத்திய வடிவமைப்பு, போக்குகள் மற்றும் மூலப்பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கும். இந்நிகழ்ச்சி, கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு தொழில்துறை சமுதாயத்திற்கு ஒரு கச்சிதமான தளமாகவும் அமையும்," என்றார், மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகத்தின் (MSRDC) இணை நிர்வாக இயக்குனரான திரு. SM ராம்சந்தானி அவர்கள்.
UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "இந்தியாவில் இதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏராளமான நடவடிக்கைகளுடன், உள்கட்டமைப்பில் அரசு மேற்கொண்டுள்ள சமீபத்திய அதிகரித்த முதலீடானது, இத்துறைக்குள்ள வாய்ப்பிற்கும், அதன் சாதனைக்கும் இடையே இடைவெளி இருப்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் உள்கட்டமைப்பிற்கு அரசு அளிக்கும் ஊக்கம், இத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு மாபெரும் வாய்ப்பினை வழங்கும். UBM இந்தியாவைச் சேர்ந்த நாங்கள், கான்கிரீட் ஷோ இந்தியா 2015, பிரிட்ஜஸ் இந்தியா 2015 என்ற புதிய இணைப்பின் மூலம், இத்தொழில்துறைக்கு வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் அதே நேரத்தில் இந்த இடைவெளிகளை நீக்கவும் எண்ணியுள்ளோம்."
UBM இந்தியாபற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in
ஊடகத் தொடர்புகள்:
ப்ரியா பாட்ஷா,
[email protected],
+91-22-71627353,
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
அஞ்சலினா பிரதான்
[email protected]
+91-11-66517646
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article